தேவையான பொருட்கள்
- அரிசி மாவு – 1 கப்
- மைதா மாவு – 1/4 கப்
- சக்கரை – 1/4 கப்
- தேங்காய் பால் – 3/4 கப் + 1 மேஜைக்கரண்டி
- உப்பு – 1/8 தேக்கரண்டி
- வெண்ணிலா எசன்ஸ் – 1/4 தேக்கரண்டி
செய்முறை
- & 1/2 கப் துருவிய தேங்காய் பூவை, 1/2 கப் வெது வெது நீர் சேர்த்து, அரைத்து, ஒரு பெரிய வடிகட்டியில் ஊற்றி, பிழிந்து தேங்காய்ப் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்
- அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சக்கரை, தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும். எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தோசை மாவு போல கெட்டியாக கரைக்கவும். மாவு அச்சில் நினைத்து எடுத்தால், சொட்டாமல் இருந்தால் நல்லது.
- எண்ணெய் காயவைத்து, அதில் முறுக்கு அச்சை அதில் வைத்து சூடாக்கவும்.
- கரைத்த மாவில் அச்சை 3/4 பாகம் மட்டும் நனைத்து, சூடான எண்ணெய்யில் விட்டு, லேசாக ஆட்டவும்.
- சற்று நொடிகளில் முறுக்கு அச்சிலிருந்து பிரியும். சத்தம் அடங்கும் வரை பொரித்து/ பொன்னிறமானவுடன் எண்ணெயிலிருந்து வடித்து எடுக்கவும். தீ எப்பொழுதும் மிதமாகவே இருக்கட்டும். சூடு குறைந்தால் மட்டும் தீயை அதிகமாக வைக்கவும்.
குறிப்புகள்
- அச்சை விட்டு முறுக்கு சிலசமயம் பிரியாது. குறிப்பாக புதிது என்றால். அப்பொழுது, ஒரு போர்க் அல்லது குச்சி வைத்து எடுத்துவிடலாம்.
- ஒரே சமயத்தில் 3 வரை பொரிக்கலாம். ஒவ்வொரு முறையும் அச்சை சூடு படுத்திக்கொள்ளவும்.
- தேவைக்கு அதிகமாக தேங்காய் பாலோ, சக்கரையோ சேர்க்கவேண்டாம்.
- இந்த பலகாரம் செய்ய, பொறுமை மிகவும் அவசியம்.