வாரம் நாலு கவி: எழுத்தெனும்

by admin 3
24 views

எழுத்தெனும் சிலைக்கு
உளியாகி
வரலாற்றுப் பக்கங்களின்
தாயனையாய்
தாளெனப் பெயரானாலும்
மதிப்புடனே
மதிப்புக் கூட்டுப்
பொருளானாய்
பத்திரத்தின் ரத்தினமாகி
உன்னதமாய்
கள்ளமில்லா உள்ளத்தின்
உருவாய்
மலரிதழின் மென்மையான
மணமாய்
நூல்களுக்கு நூலாகிப் போனாய்
நினதணியை எம் ‘மை’
கொண்டு எழுதினாலும் போதாது!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!