படம் பார்த்து கவி: அழகிய மாலை!

by admin 1
61 views

புறங்கையால் வருடிக் கொடுத்தபடி,
அவள் தலை கோதியபடி,
சாய்ந்திருந்த அவள் தோள்களில்
அவனது மெல்லிய அணைப்பாய்,
அவள் படிக்கும் கதைப்புத்தகமாய்
இருவரும் ஓர் வரியில்,
உள்ளும் வெளியிலும் நிறைந்து
கொண்டிருக்கிறது காதல்
மஞ்சள் வெயிலின் மதிய வேளையில்,
கண்ணம் சிவக்க அவள் புத்தகம் படிக்க,
காதல் பொங்க அவன் அவளை ரசிக்க,
அருகில் ஒரு பூனைக்குட்டி உறங்க,
அமைதி சூழ்ந்த ஒரு அழகிய மாலை!

இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!