ஒரு நாள் போட்டி கதை: பேருந்து பயணத்தில் ஏற்பட்ட நட்பு

by admin 2
73 views

எழுதியவர்: ஜெயகுமார்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர்கொலைகாரனோடு

என் பெயர் சரவணன். 

நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து வருகிறேன்.

பொங்கல் விடுமுறைக்காக என் சொந்த ஊரான சேலத்திற்கு செல்வதற்காக என் கல்லூரி விடுதியில் இருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தேன். பொங்கல் விடுமுறை என்பதால் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. நான் எப்படி ஊருக்கு செல்ல போகிறேன் என்பதில் எனக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. அப்போது சேலம் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்துக்கு வந்தடைந்தது வந்தவுடன் மக்கள் அனைவரும் அப்பேருந்தில் ஏறி விட்டார்கள். ஆனால் நான் மற்றும் பலரால் அப்பேருந்தில் ஏற முடியவில்லை. மாலை 05.00மணிக்கு வந்த நான் இரவு 07.00 மணி ஆகியும் என்னால் பேருந்தில் ஏற இயலவில்லை. அவ்வப்போது ஒரு பேருந்து உள்ளே வந்து கொண்டிருந்தது. அப்போது வேகமாக ஓடி பேருந்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவரிடம் அண்ணா உங்கள் பக்கத்தில் எனக்கு ஒரு இடம் பிடியுங்கள். நான் என் சொந்த ஊரான சேலத்திற்கு செல்ல வேண்டும். மிக நீண்ட நேரமாக இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவரும் எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை . சரி என்று நான் வேகமாக பேருந்தில் ஏறி அவருக்கு பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன். நான் அமர்ந்த ஒரு சில நிமிடங்களிலே திருமணமான கணவன் மனைவி இருவர் வந்தார்கள் தம்பி நீங்கள் என் முன் இருக்கையில் அமர முடியுமா என்று கேட்டார்கள் நானும் சரி என்று என் முன் இருக்கையில் வந்து அமர்ந்தேன். சில நிமிடங்களில் நடத்துனர் பேருந்தில் ஏறி 

வண்டி வேலூர் மட்டுமே நிறுத்தப்படும் வழியில் வேறு எந்த இடங்களும் நிறுத்தப்படாது வேறு யாராவது ஏறி இருந்தால் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஒரு சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு பேருந்து நகரத் தொடங்கியது. என் அருகில் இருந்த ஒருவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை கண்டு கொண்டிருந்தார் அவரது கைபேசியில். அதன் பிறகு நானும் என் கைபேசியில் போட்டியினை காணத் தொடங்கினேன். சில நிமிடங்கள் கழித்து என் அருகில் இருந்தவர் இங்கிலாந்து அணியினர் எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்று கேட்டார் அதற்கு நான் 50 அவர்களுக்கு 320 ரன்கள் அடித்திருக்கிறார்கள் நம் 321 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம். அதற்கு அருகில் இருந்தவர் கேட்டார் இந்தியா எவ்வளவு ரன் அடித்திருக்கிறது. 35 ஓவர்கள் கடந்து நிலையில் 215 ரன்கள் அடித்திருக்கிறது. மூன்று விக்கெட்டுகள் போன நிலையில் கோலி மற்றும் டோனி அவர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் போட்டியை கண்டு கொண்டு இருந்த நிலையில் போட்டியானது மழையினால் தடைப்பட்டது. நான் என் சட்டை பாக்கெட்டில் கைபேசியினை வைத்துவிட்டு அவரிடம் பேசத் தொடங்கினேன். நான் அவரிடம் அண்ணா உங்களின் பெயர் என்ன என்று கேட்டேன் தம்பி என் பெயர் ராஜேந்திரன் பா நான் சென்னையில் இருந்து சேலம் என்னுடைய ஊருக்கு சென்று கொண்டிருக்கிறேன். உன் பெயர் என்னப்பா தம்பி நீ சென்னையில் என்ன செய்து கொண்டிருக்கிறாய். அண்ணா நான் சென்னையில பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஏ தமிழ் படித்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா நீங்கள் ஏதாவது வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருக்கிறீர்களா அண்ணா. இல்லப்பா, நான்…. நான் என்று சொல்ல வந்தவர் அதன் பிறகு அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்து விட்டார். அதன் பிறகு நானும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. சில நிமிடங்களுக்கு பிறகு நடத்துனர் அவர்கள் வந்து எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு நான் சேலத்துக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள் அண்ணா என்று கேட்டேன். என் அருகில் இருந்தவரிடமும் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு சேலம் செல்கிறேன் என்று அவர் சட்டை பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார் அந்த கடிதத்தை அவர் பார்த்துவிட்டு சிறிது நேரம் என் அருகில் இருந்த வரையே பார்த்துக் கொண்டிருந்தார் அதன்பிறகு அவரிடம் எந்த பணமும் வாங்காமல் அவர் டிக்கெட் கொடுத்தார் நடத்துனர் டிக்கெட் கொடுத்தவுடன் எனக்கு இவர் யாராக இருக்கும் என்று மிகவும் ஒரு சந்தேகமாக இருந்தது ஏனென்றால் அவர் குறைந்தது 50 வயது மிக்கவராக இருந்தார். பார்ப்பதற்கு அரசு வேலையில் இருப்பது போன்றும் தெரியவில்லை ஆனால் ஏன் இவருக்கு இந்த சீட்டை காட்டியவுடன் நடத்துனர் டிக்கெட் கொடுத்தார் என்று எனக்கு புரியவில்லை சில மணி நேரங்களுக்கு பிறகு நான் அவரிடம் கேட்டேன் ஏன் உங்களிடம் அவர் காசு வாங்காமல் டிக்கெட் கொடுத்தார் நீங்கள் அவரிடம் காண்பித்தது என்ன சீட்டு அப்படி என்று நான் கேட்டேன். சில நிமிடம் மௌனத்திற்கு பிறகு அவர் என்னிடம் சொல்ல தொடங்கினார் தம்பி நான் புழல் சிறையில் இருந்து ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் என்னுடைய சொந்த ஊருக்கு போயிட்டு இருக்கேன் அவர் சிறை என்று சொன்னவுடன் எனக்கு அவரிடம் எதற்காக போனீர்கள் என்று கேட்க ஆர்வமாக இருந்தது ஆனால் அவர் எதற்காக சிறைக்கு போனார் என்று சொன்ன காரணம் என்னை ஸ்தம்பித்து போக வைத்தது. ஏனென்றால் அவர் என்னிடம் சொன்னது நான் ஒரு கொலை செய்து விட்டேன் என்று சொன்னார். என்னுடைய இதய துடிப்பானது வேகமாக அடிக்க தொடங்கியது என் கால்கள் ஈரமாகிவிட்டது.ஏன் செய்தேன் என்று என்னிடம் அவன் சொல்ல வந்த நேரம் எனக்கு என் அம்மாவிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது நான் தொலைபேசியை என் கையில் எடுத்து பேசத் தொடங்கினேன் எங்கு வந்து கொண்டிருக்கிறாய் எப்போது இங்கு வந்து சேர்வாய் என்று என் அம்மா என்னிடம் கேட்டார் இரவு 1 அல்லது 2 மணிக்கு நான் வந்து விடுவேன் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன் அதற்கு அம்மா சரி பார்த்து வா வரும்போது ஏதாவது சாப்பிட்டு வந்துவிடு சாப்பிடாம வராத பார்த்து வா இங்க வந்த பிறகு போன் பண்ணு ஓகேவா அப்படின்னு சொல்லிட்டு சரி நான் வைக்கிறேன் என்று அவர்கள் ஃபோனை வைத்தேன். போன ஏன் பாக்கெட்ல வச்சுட்டு அவரைப் பார்த்தேன் பார்த்தால் அவர் முகம் மிகவும் பெரும் குழப்பத்துடன் இருந்தது ஏன் என்று தெரியாமல் அவர்கள் என்ன ஆயிற்று என்று கேட்டேன் அதற்கு அவர் ஒன்றும் இல்லை என்று சொன்னார். உங்கள் தந்தை என்ன வேலை செய்கிறார் என்று கேட்டார் அவர். அதற்கு நான் என்னுடைய தந்தையின் என்னுடைய சிறுவயதிலேயே இறந்து விட்டார் சாரிப்பா மன்னித்துவிடு தெரியாமல் கேட்டு விட்டேன் பரவால்லைனா சரி நீங்கள் எதற்கு அண்ணா சிறைக்கு போனீர்கள் நான் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தேன். மாதம் 6 ஆயிரம் என்று பத்து மாதங்கள் கட்ட வேண்டும். அனைத்து மாதங்களும் சரியாகக் கட்டிக் கொண்டு வந்திருந்த நிலையில் கடைசி இரு மாதங்கள் மட்டும் என்னால் சரியாக கட்டவில்லை கட்ட முடிய என்னால் சரியாக கட்ட முடியவில்லை இரண்டு மாதங்கள் கழித்து 12 ஆயிரம் ரூபாயாக கட்டி முடித்தேன் கட்டி முடித்தவுடன் என்னுடைய கடன் தொகை முடிந்து விட்டது என்று கூறினேன் அதற்கு அவர் என்னிடம் நீ இன்னும்20000 ரூபாய் கட்ட வேண்டும் என்று சொன்னார் அதற்கு நான் இரண்டு மாதங்கள் தாமதமாகியதற்கு 20,000 கட்ட வேண்டுமா இது என்ன அநியாயமாக இருக்கிறது என்று கூறினேன் . அதற்கு அவர்கள் அதையெல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னார்கள். என்னால் முடியாது என்று சொல்லிவிட்டு என் வீட்டிற்கு வந்து விட்டேன் பிறகு மறுநாள் நான் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினேன் திரும்பிய எனக்கு ஒரு பேர் அதிர்ச்சி என்னுடைய மனைவி இரு குழந்தைகள் தலை கைகளில் காயத்துடன் என் மனைவியின் தலையில் பெரிய கட்டு ஒன்று போடப்பட்டிருந்தது என்ன ஆயிற்று என்று கேட்டேன் நீங்கள் இன்னும் கடன் கொடுக்கவில்லை அதற்கு திருப்பி கேட்க வந்தவர்கள் என்னையும் குழந்தையையும் தகாத வார்த்தைகளில் பேசி விட்டார்கள் என் கணவர் வீட்டில் இல்லை அவர் வந்தவுடன் நான் உங்களை வந்து பார்க்க சொல்கிறேன் என்று சொன்னேன் அது எல்லாம் எனக்கு தெரியாது எனக்கு பணம் வேண்டும் அப்படி என்று அவர்கள் சொன்னார்கள் அதற்கு என் கணவர் ஆள் இல்லை நீங்கள் இப்படி எல்லாம் பேசினால் நான் போலீஸ் இடம் சொல்லிடுவேன் என்று சொன்னான் அத சொன்னதுக்கு அப்புறம் அவங்க என் கயித்தை புடிச்சு கீழே தள்ளி விட்டுட்டாங்க என் புடவை எல்லாம் இழித்துவிட்டர்கள் இதை என்னிடம் என் மனைவி சொன்னதுஎனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நேராக அவன் வீட்டுக்கு சென்று டேய் வெளியே வாடா என்று கூப்பிட்டேன் அதற்கு அவர்கள் மனைவி வெளியே வந்தார்கள் அவரிடம் கேட்டேன் நடந்த எல்லாம் விஷயத்தையும் சொன்னேன் சொன்னதுக்கு அவங்க பணம் வாங்கி சரியா கட்ட வேண்டாம் அப்படி இல்லன்னா இந்த மாதிரி தான் பண்ணுவாங்க அவ்வளவு ரோஷம் இருக்க நீ கொடுத்த காசை திருப்பி கொடுத்துட்டு போடா நாயே என்று சொன்னார்கள் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது அதற்கு நான் நீங்கள் கேட்கும் பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என் மனைவியை நீங்கள் அடித்தது போல் பேசியது போல் புடவையை இழித்தது போல் நான் செய்யவா என்று கேட்டேன் அதற்காக அவர்கள் கோபமாக அவங்க வீட்டுக்காரருக்கு போன் செய்து இங்கு நடந்ததை அனைத்தும் சொன்னார்கள் சொன்னதும் ஐந்து நிமிடத்தில் அவன் இங்கு வந்து விட்டான். வந்ததும் வேகமாக என்னை என் வயிற்றில் எட்டி உதைத்தான் நான் சிறிது தூரம் தள்ளிச் சென்று கீழே உருண்டியபடி விழுந்தேன் . கீழே விழுந்ததும் வேகமாக வந்து என் மார்பில் எட்டி உதைத்தான் அங்கு என்ன நடக்கிறது என்று காண வந்த என் மனைவி நான் வீழ்ந்து கிடப்பதை பார்த்தவுடன் உதைப்பவனின் காலை பிடித்துக் கொண்டு வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று அழுதால் போடி தே****** என்று அவளின் மார்பில் எட்டி உதைத்தான் என் மனைவி அந்த இடத்திலே படுத்து விட்டாள் நான் வேகமாக சென்று உமா உமா என்று அவளை கன்னத்தில் தட்டி எழுப்பினேன் ஆனால் அவ்வளவு எந்த ஒரு அசைவும் இன்றி மயங்கி கிடந்தால் நான் மிகவும் பயந்து விட்டேன் ஆனால் வேகமாக வந்து அவன் என் சட்டையின் காலரை பிடித்து இழுத்துச் சென்று அங்கு இருக்கும் ஒரு மரத்தில் என் தலையை இடித்தான். தலையில் இருந்து ரத்தம் வாழிந்தது. அப்போதும் என் உமாவிற்கு என்ன ஆனது என்று பதறி கொண்டு இருந்தேன். டேய் நாயே உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் வீட்டாண்ட வந்து கத்துவே உன்ன உயிரோட புதைத்து விடுவேன் என்று கூறினான்.ஆனா என்னால் அவன் சொல்லும் எதையும் காது கொடுத்து கேட்க முடியவில்லை ஏனென்றால் என் எண்ணம் முழுவதும் என் உமாவை பார்த்தபடியே இருந்தது. பிறகு அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து என் உமாவிற்கு முகத்தில் நீர் துளித்தார்கள் அதன்பிறகு உமா கண் விழித்தால் கண் விழித்ததும் அவள் கண்கள் என்னை தேடியது என்னை பார்த்தவுடன் பதறி என் அருகில் வந்து அவள் முந்தானையை எடுத்து என் தலையில் வைத்து பிடித்துக் கொண்டாள் வேண்டாம் விட்டுவிடுங்கள் வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று எனக்கு பணம் கொடுத்தவனிடம் கெஞ்சினால் ஆனால் அவன் என் உமாவின் தலை முடியை பிடித்து மேலே தூக்கினான் இதை பார்த்த எனக்கு மிகவும் கோபம் வந்தது பக்கத்தில் இருக்கும் ஒரு செங்கலை எடுத்து வேகமாக அவன் தலையில் அடித்தேன் அவன் கீழே விழுந்து விட்டான் விழுந்ததும் வேகமாகச் சென்று அவன் மார்பின் மேல் ஏறி அமர்ந்து விட்டேன் கழுத்தில் கை வைத்து மறுகையில் இருக்கும் செங்கலினால் அவன் முகத்தில் ஓங்கி அடித்துக் கொண்டே இருந்தேன் அவன் முகத்தில் ஒரு பாதியானது நசுங்கி விட்டது பிறகு என் பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய கல்லினை எடுத்து அவன் தலையில் போட்டு விட்டேன் சில நிமிடங்களிலே அவன் உயிர் போனது. அங்கிருந்த அனைவரும் என்னை போலீசில் ஒப்படைத்து விட்டார்கள். பின்னர் எனக்கு சேலம் நீதிமன்றத்தால் 12 ஆண்டு சிறை தண்டனை என்று தண்டனை பிறப்பிக்கப்பட்டது நல் நடத்தையின் காரணமாக ஏழு ஆண்டுகளிலே என்னை வெளியே விட்டு விட்டார்கள். இவர் சொன்ன கதையை கேட்ட சரவணன் கண்ணில் நீருடன் கேட்டுக் கொண்டிருந்தான் பிறகு சரவணன் அண்ணா இப்போது உங்கள் மனைவி குழந்தைகள் எல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டான் சேலம் அருகே ஒரு கிராமத்தில் ஆடு மாடு வைத்துக் கொண்டு விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறாள் . கடைசியாக எப்பொழுது பார்த்தீர்கள் அண்ணா நீங்கள் உங்கள் மனைவியை மாதம் ஒருமுறை என்னை வந்து பார்த்து விடுவாள் நீங்கள் வீட்டிற்கு வருவது அவர்களுக்கு தெரியுமா! தெரியும் போன மாதம் வந்த போது அவளிடம் கூறிவிட்டேன் எனக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் என்று நினைக்கிறேன் சரி அண்ணா நீங்க வீட்டிற்கு சென்று அக்காவை நான் கேட்டதாக சொல்லுங்கள் சரி அண்ணா வாருங்கள் நாம் இப்போது இறங்கலாம் சேலம் வந்துவிட்டது. தம்பி சரவணா உன்னிடம் என்னுடைய கதையை சொன்னதால் என் மனம் ஏதோ லேசாக இருக்கிறது. சரி தம்பி நான் இப்போது என்னுடைய வீட்டுக்கு செல்கிறேன் என் மனைவி என் குழந்தைகளும் எனக்காக காத்துக் கொண்டிருப்பார்கள் சரி அண்ணா இப்ப நீங்கள் உங்கள் ஊருக்கு செல்வதற்கு உங்களிடம் பணம் இருக்கிறதா என்று நான் கேட்டேன் அதற்கு அவர் நான் சிறையில் வேலை செய்ததற்கு எனக்கு பணம் கொடுப்பார்கள் அந்த படம் என்னிடம் இருக்கிறது நான் சென்று வருகிறேன். என்று சொல்லிவிட்டு ராஜேந்திரன் அவர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே சென்று விட்டார். இவர் சொன்ன கதை எல்லாம் கேட்ட சரவணன் மிகவும் கனத்த இதயத்துடன் அவன் அம்மாவிற்கு ஃபோன் செய்து நான் சேலம் பேருந்து நிலையம் வந்து விட்டேன் அண்ணாவை வர சொல்லுங்கள் என்று சொன்னான். சரவணன் கனத்த இதயத்துடன் அவன் அண்ணாவின் வரவை நோக்கி காத்துக் கொண்டிருந்தேன்

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!