எழுதியவர்: மித்ரா சுதீன்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு!
போங்க எனக்குன்னு எதுவும் செய்ய வேண்டாம் எல்லாம் அவளுக்கு எடுத்து குடுங்க”கத்தினாள் தேவி
“நீ என்னடி சொல்றது நானே போறேன் மனுஷன் இருப்பானா இந்த வீட்டுல”என்றபடி கதவை திறந்தவன் திறந்த வேகத்தில் மூடிக்கொள்ள
“டப்”என்ற பெரும் சத்தத்தோடு வீட்டை மறைத்துக்கொண்டது கதவு.
அழுதழுது கண்கள் சிவந்து போனது தேவிக்கு.
அழுதபடியே கிடந்தவள் சில நிமிடங்களில் ஓர் முடிவுக்கு வந்தவளாய் கண்ணீரை அழுத்தி துடைத்துக் கொண்டாள்.
கிச்சனுக்குள் சென்றவள் பால் காய்ச்சினால்.
“அம்மா அம்மா “குழந்தை கனி கூப்பிடும் சத்தம் கேட்டு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு போனாள்
“எழுந்திட்டியா என் செல்லம் “என்றவள் இரண்டரை வயது மகளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் கண்ணத்தில் சூடாய் கண்ணீர் வழிந்தது.
“டிங்டாங் “அழைப்பு மணி ஒலிக்க பிள்ளையை தூக்கிக்கொண்டே ஹாலுக்கு போனாள்
“யாராய் இருக்கும் அவனாய் இருக்க வாய்பில்லை ..பின்பு யாராய் இருக்கும் ?”என்ற யோசனையுடன் திறந்தாள்.
நீல நிற சுடிதாரில் நடுத்தர வயது பெண் ஒருத்தி பார்பதற்கு மிகவும் அழகாய் இருந்தாள் .
“யாரு நீங்க ?”
“உள்ள வரலாமா ?”புதியவள்
தேவி சற்று தயங்கினாளும் “வாங்க “என்றாள்.
‘வீட்டை நல்ல சுத்தமா வச்சிருக்கீங்க குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா ?”
“ஒரு நிமிஷம் “
உள்ளே சென்று டம்பிளரோடு வந்தாள்.
“இந்நாங்க “
“நா இந்த பிளாட்டுக்கு குடி வரதா இருக்கேன் பழைய வீட்டில் இருந்து பொருள் எல்லாம் எடுத்தாச்சு பின்னாடி வந்துகிட்டு இருக்காங்க வீட்ல தனியா இருக்க போர் அடிச்சது அதான் இங்க இருக்கலாமேன்னு வந்தேன்
இஃப் யூ டோண்ட் மைன்ட் ….”என்று இழுக்க
“ஓ தாராளமா எனக்கு ஒன்னும் பிரச்சன இல்ல. கொஞ்சம் இருங்க பாப்பா இப்பதான் தூங்கி எழுந்தா அவளுக்கு பால் கலந்து குடுத்திட்டு வரேன் “என்று குழந்தையுடன் எழுந்தவளிடம்
“பாப்பாவ வேணா நா வச்சிக்கட்டுமா ?”
“இந்தாங்க “என்று தந்து விட்டு கிச்சனுக்குள் சென்றாள்.
கிச்சனில் அவள் வேலை செய்ய செய்ய ஹாலில் பேச்சும் விளையாட்டு சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.
தேவிக்கும் மனமெல்லாம் சந்தோஷமாகவே இருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் வேலை முடித்து விட்டு ஹாலுக்கு வர அவர்கள் இருவரும் இன்னமும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
“பரவாயில்லையே என் பொண்ணு யார் கூடயும் இப்படி விளையாடி நா பார்தது இல்ல உங்கூடத்தான் இப்படி விளையாடுறா ?”என்று சொன்னபடியே வந்து அருகில் அமர்ந்தாள்.
“எல்லாருமே அப்படித்தான் சொல்லுவாங்க “என்றாள் புதியவள்.
இதற்கு நடுவில் குழந்தை கனி புதியவளின் கை தொட்டு சிரிக்க “இன்னைக்கெல்லாம் இருந்திருந்தா எங்க அக்கா பொண்ணு இப்படித்தான் இருந்திருப்பா இந்த வயசுதான் அவளுக்கும் “
“ஓ சாரி …”
“எங்க அக்கா எடுத்த முட்டாள்தனமான முடிவுக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்கறீங்க?”
“உங்களை மேலும் கஷ்டபடுத்தறேன்னு நினைக்க வேண்டாம் என்னாச்சு அக்காவுக்கு சொல்ல வேண்டாம்னு நினைச்சா வேண்டாம் “
“உண்மைய சொல்ல ஏன் தயங்கனும் “புதியவள்.
இதற்கிடையில் போன் வர எடுத்து பேசியவள் “அப்படியா சரி பாத்து வாங்க நா பத்திரமாத்தான் இருக்கேன் “என்றவள் தேவியிடம்
“வண்டி பிரேக் டவுன் ஆயிடுச்சாம் வர லேட் ஆகும்னாங்க “
ஒரு சிறு அமைதி …
“எங்க அக்கா பேரு வந்தனா …மாமா சாஃப்வேர் என்ஜினியர் கல்யாணம் ஆகி ஐஞ்சு வருஷம் இருக்கும்
அப்ப அவ முழுகாம இருந்தா வீடே சந்தோஷத்துல இருந்தோம்…”மீண்டும் ஓர் அமைதி
“அப்பா எங்க மாமா ஆபிஸ்ல ஏதோ பிரச்சன …அவர் பெரும் பாலும் ஆபிஸ் விஷயத்த வீட்டுக்கு கொண்டு வர மாட்டாரு
அப்பவும் அப்படித்தான் இவ வேற கர்பமாக இருந்ததால எதுவுமே காட்டிக்கல
அதே சமயம் அக்கா கிட்டயும் சரியா பேசாம வீட்டுக்கு வர்றது போறதுமாவே இருந்திருக்காரு
இவளுக்கு உள்ளூக்குள்ள ஒரு சந்தேகம் எங்க மாமாம அவள் விட்டு விலகுறாரோன்னு மனசுல கண்டதையும் போட்டு குழப்பி கிட்டு இருந்தா ஆனா இது எதுவுமே யார்கிட்டேயும் சொல்லவும் இல்ல காட்டிக்கவும் இல்ல …அந்த நேரம்தான் எங்க மாமாவும்
ஆபிஸ் பிரச்சன விஷயமா அவரு ஒரு பொண்ணு கூட பேசறத ரெண்டு மூணு தடவ வந்தனா பாத்திருக்கா
ஒரு நாள் யாரு என்னன்னு கேள்வி கேட்டா …அன்னைக்குன்னு எங்க மாமாவுக்கு அதிக வேலை பளு
இவங்க பேச்சு தடிக்க அவரும் கோபத்துல “ச்சீ உன்ன கண்டாலே எரிச்சலா இருக்கு ….”நிறுத்திய புதியவளின் விழிகளில் ஈரம் கசிய….
தேவிக்கு அவளை யாரோ ஓங்கி அறைந்தது போல் இருந்தது..ஆம் இவளின் நிலையும் இதுதான் காலையில் பிரச்சனையும் இதுதான்
ஒருவேளை இவளின் அக்கா கணவன் போல தன் கணவனுக்கும் சொல்ல முடியாத வேலை சுமையாய் இருக்குமோ ..
இதற்கு இடையில் கனி தேவிக்கு தன் பசியை அழுகை மூலம் தெரிவிக்க
“வந்து….”என்று தொடங்கிய வளை
“நீங்க போங்க சாப்பாட்ட தயார் செய்யுங்க பாப்பாவ நா பாத்துக்கிறேன் “என்றாள்
சரியாய் ஒரு மணி நேரத்தில் கையில் சாப்பாட்டு பவுலுடன் வந்தாள் .
இவளை பார்த்தும்”ஐயோ சாரிங்க உங்களுக்கு எதுவுமே தரல கொஞ்சம் இருங்க சாப்பிட கொண்டு வரேன் “என திரும்பியவளை
“இல்ல வேண்டாம் நீங்க பாப்பாவுக்கு ஊட்டுங்க நா அப்புறம் சாப்பிட்றேன் பசியில்ல “என்றாள்.
கனி பசியுடன் இருந்ததால் ஏதும் கஷ்டபடுத்தாமல் சாப்பிட்டால்.
இதனால் நடு நடுவில் அந்த புதியவளை ஏறிட்டு பார்த்தாள் தேவி.
“நல்ல நிறம் வெள்ளையும் அதிகம் இல்லை கருப்பின் சாயலும்மில்லை கோதுமை கலர் கண்சிமிட்ட பார்க்க பார்க்க மேலும் பார்க்கத் தூண்டும் அழகு.
எந்த ஆணையும் அசர வைக்கும் அழகு .புருவங்கள் நல்ல அடர்த்தியாய் வடிவோடு வளைந்து இருந்தது.
கண்கள் திராட்சை போல் இருந்தது.
வகிட்டில் குங்குமம் சிரித்தது. ஃபோன் அடிக்க கலைந்தாள் தேவி.
அவள் கணவன் தான் அழைத்தது .கனியை மடியில் இருந்து இறக்கி விட புதியவளிடம் தஞ்சம் புகுந்தாள் அவள்.
கண்ணீர் கண்களை மீறி வர ஆன் செய்தாள் “சொல்லுங்க “
அந்தப்பக்கம் அமைதி சில நிமிடங்கள் பின் கலைய “சாப்டியா ?”
“இல்ல இனிதான் நீங்க ?”கண்ணீர் அவளையும் அறியாது வழிந்தோடியது
“சாப்டேன் நேரம் ஆகுது இல்ல நீயும் சாப்பிடு நா வர நேரம் ஆகும் ஆபிஸ் வேலை அதிகம் ராத்திரி கடந்தாலும் கடந்திடும்
அம்மாவ வேணா துணைக்கு கூப்டுக்க நா வந்ததும் எல்லாம் பேசிக்கலாம் என்ன வச்சிரவா ?”
“ம் சரி “என்றாள் ஒற்றை வரியில் ஆனால் அப்பொழுதே அவனிடம் பேசிட மனம் துடிக்க அவனின் நிலை ..அவன் சொன்னது நினைவு வரவே வேண்டாம் என்று மனம் சொன்னது .
வைத்த சிறு நேரத்திற்கெல்லாம் அம்மா அழைத்தாள் “தேவி மாப்பிளை பேசினார் நானும் கிளம்பலாம்னு இருந்தேன் உங்க பாட்டிக்கு உடம்பு சரியில்லை
உனக்குத்தான் தெரியுமே அப்பா ஊர்ல இல்ல …இப்ப என்ன செய்ய பேசாம நீ இங்க வந்துட்றியா ?”
‘இல்லம்மா நா இருந்திடறேன் ஒன்னும் பயம் இல்ல நீ பாட்டிய பாத்துக்க “என்று வைத்து விட்டாள்.
“என்னாச்சு எதாவது பிரச்சனையா ?”புதியவள்
“இல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என் கணவர்தான் ஃபோன் செஞ்சார் …”எனத்தொடங்கி அத்தனையும் கூறினாள்.
“ஓ அத்தன தானே ஒன்னும் பயம் வேண்டாம் உங்களுக்கு ஆட்சபனை இல்லைனா நா இருக்கேன் உங்க கூட.. இவரு இப்பதான் மெசேஜ் அனுப்பினார் வேலை முடிய ராத்திரி ஆகுமாம்
அத்தன நேரம் கழிச்சு பயணம் செய்யறது சரி வராதுன்னு பக்கத்துல அவங்க அத்த வீடு இருக்கு தங்கிட்டு வரேன்னாரு என்னை ஆட்டோ புக் செஞ்சிட்டு வர சொன்னார் நா உங்க கூட இருக்கேன்னு சொல்லிடறேன் உங்களுக்கு சரின்னா …”என்றாள்.
“இதுல எனக்கு எந்த தொந்தரவும் இல்ல கொஞ்சம் இருங்க கனி தூங்கிட்டா உள்ள படுக்க வச்சிட்டு வரேன் நாம சாப்பிடலாம் “
இருவரும் சாப்பிட அமர “கேக்கறேன்னு தப்பா எடுத்துக்க வேணாம் நீங்க யாரும் அக்கா பக்கத்துல இல்லையா ஒரு போன் கூட செய்யலையா ?”தட்டுகளை வைத்து சாதம் பரிமாறிய படியே கேட்டாள் தேவி
“அதான் விதி அத்தன வருஷம் கழிச்சு அவ முழுகாம இருந்ததால நாங்க குடும்பத்தோட பொங்க வைக்க எங்க கிராமத்துக்கு போய்டோம்
அங்க சிக்கனல் எல்லாம் கிடையாது “
சிறு மௌனம் இரண்டு பேரும் நாலு வாய் சாப்பிட்டார்கள் பிறகு புதியவளே தொடங்கினாள்…
“வந்தனா சாதாரணமாகவே ரொம்ப சென்சிடிவ் மாமா சின்னதா ஒரு குரல் கெட்டியா எழுப்பினாளே அழுதுருவா…
அரேஜ்டு மேரேஜ்தான்னாலும் மாமாமேல அத்தன பிரியம் …இதுல மூணு வருஷம் ஆச்சு இன்னும் முழுகாம இருக்காளே இவள ஒதுக்கி வச்சிட்டு வேற கல்யாணம் செஞ்சிக்கோன்னு மாமாவ அவங்க அம்மா சொன்னப்ப.. மாட்டேன்னு பிடிவாதமா நின்னார் அது மேலும் அவளுக்கு அவர் மேல் ரொம்ப மதிப்பும் மரியாதையும் வரவச்சது ..
எத்தன தடவ எத்தன பேரு சொல்லியிருப்போம் தெரியுமா…?இத்தன பொஸசிவா இருக்காதே அது நல்லதுக்கு இல்லன்னு ….”சிறு மௌனம் …
இம்முறை மௌனத்தின் நீளம் நீள…”இந்தாங்க தண்ணீ”என்று நீட்டினாள் தேவி.
வாங்கி குடித்தவள் தொடர்ந்தாள் ‘மாமாகூட சொல்லிட்டார் இந்த மாதிரி அதிகம் பாசம் அன்பு வைக்காத அது மனச கொன்னுடும்னு ஆனா அவ கேக்கல..
கோபத்துல அவர் சொன்ன அந்த ஒரு வார்த்த அவளை கொண்ணுருச்சு
கொஞ்சம் கூட யோசிக்காம சாப்பாட்டுல விஷம் கலந்து சாப்டுட்டா …”என்றவளது கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது….
“அச்சோ ப்ளீஸ் அழாதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு நீங்க சாப்பிடுங்க அப்புறம் பேசிக்கலாம் .”என்றாள்
“இல்ல எனக்குப்போதும் “என்று தட்டிளே கைகழுவி விட்டாள்.
பின்பு தேவியுடன் சேர்ந்து பாத்திரங்களை எடுத்து வைத்து விட்டு படுத்தாள்.
மீண்டும் மாலையில் அவர்களின் உரையாடல் ஆரம்பித்தது .இந்த முறை பொதுவாய் ஏதேதோ பேசினாள் …பேசினாள் என்பதை விட கனியுடன் விளையாடினாள் .
விளையாட்டின் வேகத்தில் கனி ஓடி வந்து புதியவளின் வயிற்றில் முட்டிட வர சட்டென தூக்கிக் கொண்டாள் புதியவள் .
அப்பொழுதுதான் தேவி புதியவளின் வயிற்றை பார்க்க அது லேசாய் மேடிட்டிருந்தது.
புதியவளிடம் பேசப்போக அந்த நேரம் பார்த்து அவள் கணவன் போன் செய்தான் அந்த பேச்சில் அவள் புதியவளிடம் கேட்க நினைத்ததை மறந்தாள் .
“நீங்க இரண்டு பேரும் பெட்ரூம்ல படுத்துக்கங்க நா ஹால்ல படுத்துக்கறேன் “புதியவள்
“இல்ல இடம் இருக்கு எங்களோடே…”தேவி பேச
அவளை இடைமறித்தபடி “ப்ளீஸ் வேண்டாமே …”என்றாள் ஏனோ தேவிக்கு மேலும் வற்புறுத்த மனமில்லை.
கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் தேவி நல்ல தூக்கம் என்பதால் விழிகளை திறக்கவே சிரமப்பட்டாள்.ஆயினும் ஒரு வழியாய் எழுந்து போய் கதவை திறந்தாள்.
வெளியில் முத்தம்மா நின்றிருந்தாள்.இந்த அபார்ட்மெண்ட்டில் வேலை செய்பவள் இங்கு தான் இருக்கிறாள் தனியாக வீடேதும் கிடையாது .
அபார்ட்மமெண்ட் வாசிகள் ஒன்று சேர்ந்து ஷெட் போட்டுத்தந்தார்கள் .அதில் அவ்வப்பொழுது படுத்து தூங்குவாள் என்றாவது சமைப்பாள் .
மற்ற நாளில் யார் வீட்டில் வேலை செய்கிறாளே அங்கேயே சாப்பிட்டு விடுவாள் .சமயத்தில் அவர்கள் வீட்டிலேயே படுத்தும் தூங்கி விடுவாள்.
‘பயப்படாதம்மா கீழ ஒரே கொசு கடி ஷெட்டுலயும் ஒரே கசகசப்பு காத்தே வரல கண் விழிச்சு பார்தப்ப உங்க வீட்டு பாத் ரூம்ல லைட் எரிஞ்சது அதான் இங்க வந்து படுக்கலாமேன்னு “
அப்பொழுதுதான் புதியவள் ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைவே வந்தது அவளுக்கு .
“சரி சரி வந்து படு தண்ணி டைனிங் மேல் இருக்கு எடுத்துக்கோ “
“சரி கண்ணு நீ போய் தூங்கு நா பாத்துக்கறேன் “என்று உள்ளே வந்து கதவை சாற்றினாள்.
காலையில் தேவி புரண்டு படுக்க அவள் கைகள் கணவன் மீது பட ஒரு கணம் அதிர்ந்தாள்.
“ச்சீ நீங்களா …எப்ப வந்தீங்க ?”
‘ம் கொஞ்ச நேரம் முந்தி தான் முத்தம்மாதான் திறந்தா நா வரவே கிளம்பிட்டா படுக்க சொன்னாலும் கேக்கல “என்றான்
“ஓ அப்ப அந்த…”என்பதற்குள் அவனோ “ப்ளீஸ் தேவி டயர்டா இருக்கும் அப்புறம் பேசலாம் ‘என்று போர்வை இழுத்து போர்திக்கொண்டு தூங்கினான்.
அந்த போர்வைக்குள் புதைந்துப்போனது புதியவளை பற்றிய பேச்சு .
கோயில் வாசலில் முத்தம்மா அமர்ந்திருக்க அந்த பக்கம் வேறு ஒரு வேலை ஆள் தரையை கூட்டிக்கொண்டு இருந்தாள்.
“வாம்மா தேவி வீட்டுக்காரர் வேலைக்கு கிளம்பிட்டாங்களா தம்பி வந்ததும் நா வந்துட்டேன்.. உன்கிட்ட சொல்லச் சொன்னேனே “
“ஹான் சொன்னாரு ..”என்றபடி சென்றவள் ஒரு நிமிடம் நின்று திரும்பி
‘ஏன் முத்தம்மா உன் கூட படுத்திருந்தாங்களே அவங்க ஆளையே காணோமே உன் கிட்ட ஏதும் பேச்சு கொடுத்தாங்களா ?”
அந்தப்பக்கம் பெருக்கிக்கொண்டிருந்தவள் ஒரு கணம் நின்றுவிட முத்தம்மா அவளை விழிக்கொண்டு ஏதோ சொல்ல அவள் தன் வேலையை தொடர்ந்தாள்.
“ஆமாம்மா நீ போய் படுத்த பின்பு அந்த பொண்ணுக்கு ஒரு போன் வந்துச்சு வேண்டிய யாருக்கோ ஆக்சிடெண்டாம் நீ எழுந்ததும் சொல்ல சொன்னாங்க நான்தான் மறந்துட்டேன் “
“ஓ ..
நான் வேற அவங்க பேர்.. விவரம் கேட்க மறந்துட்டேன் பாவம் என்ன அவசரமோ …”என்று தயங்கி நிற்க
‘சரி விடு பாத்துக்கலாம் நீ போய் விளக்கு ஏத்து குழந்தைய பக்கத்து வீட்ல விட்டுட்டு வந்திருப்ப அழப்போறா “என்றாள்
“அட ஆமா சரியா நினைவு படுத்தினீங்க “என்றவள் சிறிது நேரத்திலே விளக்கை ஏற்றி விட்டு அகன்றாள்
“என்ன முத்தம்மா அந்தம்மா தனியா இருக்கு துணைக்கு படுக்க கூப்டதா சொன்ன இப்ப அந்தம்மா ஒன்னு சொல்லுது என்ன விஷயம் ?”பெருக்கி முடித்தவள் கேட்டாள்.
“சொல்வேன் ஆனா பயப்படக்கூடாது ?”முத்தம்மா
“என்ன முத்தம்மா என்னவோ பேய் கூட படுத்தமாதிரி சொல்ற”
“அதேதான் “முத்தம்மா
“என்ன சொல்ற “என்று வாயை பிளந்தவளிடம்
“அந்த பொண்ணு தேவி இங்க வந்து நாலு வருஷம் ஆகுது அதுக்கு முன்னாடி அந்த வீட்ல வந்தனான்னு ஒரு பொண்ணு இருந்தா ரொம்ப நல்லவ என்ன ஒன்னு புருஷன் மேல அத்தன பிரியம் பைத்தியம்கூட… “
‘நல்லது தானே “
“நல்லதுதான் அளவுக்கு மீறிப்போனா எதுவுமே நல்லது இல்ல விஷம் …கடைசியில் அப்படி ஒரு விஷம்தான் அவள கொண்ணுருச்சி
புருஷன் காரன் ஒரு வார்த சொல்லிட்டான்னு வயித்து புள்ளயபத்தி கூட நினைக்காம சோத்துல விஷத்த கலந்து சாப்டிருச்சு
இந்த தேவி பொண்ணும் கிட்டதட்ட அதே மாதிரிதான் அதான் அந்த பொண்ணுக்கு உதவ நேத்து வந்து போச்சு… கடவுள் கனவுல வர்றமாதிரி என் கனவுல வந்து சொல்லுச்சு நானும் போனேன்”
“என்னக்கா ஏதேதோ சொல்ற “
“பயப்படாதாடி நீ அதுக்கு முன்னாடி இருந்து இங்க இருக்க ஒன்ன அந்த பொண்ணு எதாவது செஞ்சிருக்குமா இல்ல அடுத்தவங்கள தான் தாக்கியிருக்குமா??
மனுசபயலுகள பாத்து தான்டி பயப்படனும் ஆவிங்கள பார்த்து இல்ல அவ ரொம்ப நல்லவடி எதுவும் நடக்காது நீ இத பத்தி யோசிக்காம வேலய பாரு “என்றாள்.
“சரி “சொல்லிச் சென்றவள் சிறிது தூரம் சென்று திரும்பி பார்க்க
“என்ன வந்தனா வருவாளானு பயப்படுறியா ?காப்பாத்தத்தான் வருவா கதறடிக்கயில்ல…பயப்படாம போ..ஏதும் பேசிக்காத.”
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.