காதல் படப் போட்டி கதை: இதுக்கு பேர்தான் காதலா

by admin 2
47 views

எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன்  ஸ் 

சுரேஷ் அந்த பெரிய கம்பெனியில் உயர் அதிகாரி , கை நிறைய சம்பளம் வாங்குகிறான், கல்யாண வயசு ஆகி விட்டது , பெற்றோர் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டனர் . ஆனாலும் சுரேஷுக்கு பள்ளியில் படிக்கும் போது ஏற்பட்ட ஒரு இனம் புரியாத உணர்வு இன்னமும் அவனுள் அவ்வப்போது எட்டி பார்த்து
ஒரு வித இம்சையினை அளிக்க தான் செய்தது , அவனும் இது பற்றி யாரிடமும் கூறாது மனதிற்குள் வைத்து அவ்வப்போது அசை போடுவான் . பள்ளி நண்பர்கள் ஒரு சிலருக்கு மட்டும் தான் அவனது பழைய நிகழ்வுகள் தெரியும் .
சுரேஷ் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அந்த பள்ளிக்கு புதிதாக வந்த மல்லிகா டீச்சர் தான் அவனுள் ஒரு வித கிளர்ச்சியை ஊன்ற காரணம் . புதிதாக வந்த மல்லிகா டீச்சர் வந்த முதல் நாளே எல்லா மாணவர்களிடமும் அன்புடன் பழகி , நல்ல பெயர் எடுத்து விட்டார்கள்.
சுரேஷுக்கு மட்டும் அல்ல , எல்லா மாணவர்களுக்கும் மல்லிகா டீச்சர் வகுப்பு என்றால் யாரும் மட்டம் தட்ட மாட்டார்கள் . புரியாத பாடத்தை கூட எளிதில் புரியும் படி சொல்லி கொடுத்து நல்ல மார்க் வாங்கும் படி செய்தது எல்லா பெற்றோர்களுக்கும் கூட ஒரு நல்ல மதிப்பை மல்லிகா டீச்சர் அளித்தது
வியப்பில்லை .

ஒரு நாள் விடுமுறை என்றாலும் எல்லா மாணவர்களுக்கும் மீண்டும் எப்படா , பள்ளி திறப்பாங்க , என்ற எதிர் பார்ப்பை அளித்து விட்டது. பள்ளி இறுதி வகுப்பு முடிந்து எல்லா மாணவர்களும் அடுத்து கல்லூரிக்கு செல்ல தயாராகி விட்ட நிலையில் கூட ஒரு சில மாணவர்கள் சுரேஷும் கூட , இன்னமும் மல்லிகா டீச்சரை மறக்க வில்லை .
மல்லிகா டீச்சரும் குறிப்பாக அந்த எட்டாம் வகுப்பு மாணவர்களை இன்னமும் மறக்க வில்லை , அவரது முதல் ஆசிரிய பாடம் இந்த மாணவர்களிடம் தான் . ஆதலால் அவருக்கு அந்த மாணவர்கள் என்றால் ஒரு வித கூடுதல் மதிப்பு .

சுரேஷும் எப்போது லீவு விட்டாலும் ஊருக்கு வந்ததும் மல்லிகா டீச்சரை பார்க்க பள்ளிக்கோ அல்லது வீட்டுக்கோ செல்ல தவறுவது இல்லை . டீச்சர்க்கும் பள்ளியில் வேலைக்கு சேர்ந்த தும் நான்கு வருடங்களில் திருமணம் ஆகி விட்டது . சுரேஷ் டீச்சரின் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அவரது கணவரையும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தான் , அவரும் ஒரு பள்ளியில் ஆசிரியர் தான் .
எந்த வித விகல்பமும் இல்லாமல் சுரேஷ் மல்லிகா டீச்சரிடம் பழகி யது சுரேஷின் பெற்றோர் களுக்கும் எவ்வித சந்தேகத்தையும் அளிக்க வில்லை . ஒரு நாள் சுரேஷின் அம்மா மெல்ல அவனிடம் கல்யாண பேச்சை எடுத்தாள் . ” சுரேஷ் , அப்பாவுக்கு வயசு ஆகிக்கொண்டு போகிறது . காலா காலத்தில் உனக்கு நாங்க ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும் . நீ சரினு சொன்ன நாங்க நல்ல இடமா பாக்கிரோம் , அல்லது நீயே யாரையாவது மனசில் வைத்து இருந்தால் சொல்லிவிடு , தாராளமாக நாங்க ஒத்துகிறோம்”
என்று சொன்னதும் ” அம்மா , எனக்கு வர போற பொண்டாட்டி எங்க மல்லிகா டீச்சர் யை போல நல்ல
குணவதியாக இருக்கனும் , எனக்கு வசதி எல்லாம் தேவை இல்லை , ” என்று சொன்னதும் அதற்கு அம்மா ” டேய் , மல்லிகா டீச்சர் வயசு என்ன , அவங்களை போல குணம் என உளறாதே ” என்று சொன்னதும் ” அம்மா , நீங்க தப்பா எண்ணாதீங்க . மல்லிகா டீச்சர் போல குணம் என்று தான் நான் சொன்னேன், அவங்களாலே இன்னிக்கு பல ஸ்டுடென்ட்ஸ் நல்ல முறையில் இருக்காங்க , அவங்களிடம் உள்ள ஒரு ஈர்ப்பு சக்தி இன்னைக்கு பல பேரின் வாழ்க்கை முறையை மாத்தி உள்ளது ” என்று சொன்னதும் தான்
சுரேஷின் அம்மாவுக்கு சற்று புரிய ஆரம்பித்தது .
” சரிடா , நீ சொன்னது இப்போதுதான் எனக்கு உரைக்க ஆரம்பித்தது . ஆசிரியர் தொழில் என்பது ஓவர் உன்னத மான தொழில் , அண்ணல் இன்றைய உலகம் ஆண் ஆசிரியர்களுக்கு தரும் மரியாதையை பெண் ஆசிரியைகளுக்கு தருவதில்லை . மாணவர்கள் அவர்கள் மேல் காட்டும் மரியாதையை கூட தப்பா தான் பாக்கிறாங்க ” என்று சொல்லி ” நீயே ஒரு நல்ல பெண்ணா பாத்து சொல்லு , உன் அளவுக்கு எங்களுக்கு இப்போதெல்லாம் புத்தி கூர்மை இல்லை .
நீ அந்த மல்லிகா டீச்சர் மீது காட்டிய ஒரு அன்பு , ஈர்ப்பு இவற்றை நான் தப்பா காதல்னு புரிஞ்சு கொண்டேன் : என்று கூறி ஒரு வழியாக சுரேஷ் கல்யாணத்திற்கு பச்சை கொடி காட்டி விட்டதை ஏண்ணி மகிழ்ச்சி அடைந்தாள் .

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!