எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
நான் இரண்டாம் ஆண்டு பட்ட பட்ட படிப்பு படிக்கும் போது ஒரு புதிய இளம்பெண் ஆங்கில பேராசிரியாக வந்தார். அவருக்கு கல்யாணம் ஆக வில்லை.
பி. எச். டி வாங்கிய உடன் அவருக்கு முதல் முறையாக ஊட்டி கல்லூரியில் அப்பாயிண்ட்மென்ட் கிடைத்தது. அவர் நன்றாக பாடம் எடுப்பார். முதலில் ஆங்கில கட்டுரை எழுத சொன்னார். அதாவது கூண்டில் உள்ள கிளியிடம் காக்கா பேசுவதை கற்பனனையாக எழுத சொன்னார்.
நான் வித்தியசமாக எழுதினேன். காக்கை கிளியிடம் ” நீ வெளியே வர யோசிக்கா தப்பி தவறி கூட செய்யாதே. வெளி உலகம் மிக மோசமானது. மேலும் எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது..! ” என்று சொன்னார்.
அடுத்த வாரம் ஒரு கற்பனை விவாதம்… கவிஞர் மற்றும் விஞ்ஞானி பேச்சை எழுத சொன்னார். நான் வழக்கம் போல வித்தியாசமான உரையாடல் எழுதினேன்.
ஆம். கவிஞரும் விஞ்ஞானி பேசினால் ஏன் கவிதை மற்றும் விஞ்ஞானம் தான் எழுத வேண்டுமா…? நான் அவர்கள் இரண்டு பேரும் பெண் விடுதலை பற்றி பேசுவதாக எழுதினேன்.
நான் எழுதிய இரண்டு கட்டுரையும் அடித்து விட்டு ” இர்ரெலவண்ட்” ( சம்மந்தம் இல்லாதது) என எழுதினார். எனக்கு கோபம். நான் நேரே இங்கிலிஷ் டிபார்ட்மென்ட் சொனறேன். அவர் எதிர்பார்க்க வில்லை. இருவருக்கும் இடையே தீவிர விவாதம் நடந்தது. நீங்கள் ஏன் கற்பனை விவாதம் எழுத சொன்னீர்கள்…? ஏன்… கவிஞரும் விஞ்ஞானி பேசினால் கவிதை மற்றும் விஞ்ஞானம் பற்றி தான் பேச வேண்டுமா..? ஏன்… இருவரும் பெண் விடுதலை குறித்து பேசக் கூடாதா…? ஏன் கற்பனை என்று கேட்டு இருந்தீர்கள்…! “
” ஒகே…. நான் திரும்பவும் திருத்தி மதிப்பெண் அளிக்கிறேன்…! ” ” மிக்க நன்றி..! ” என்று சொல்லி கிளம்பினேன. நான் கடைசி வருடம். தினமும் லெக்சரரை வழங்குவேன்.
கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது அப்போது லெக்சரர் என்னை டிபார்ட்மென்ட் வர சொன்னார். நான் போனைன.
” என்னை கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் இருக்கா..?”. என நேரடியாக விஷயத்திற்கு வந்தார். எனக்கு ஷாக்..! அதிர்ச்சி…!!
” இன்னும் ஒரு வாரத்தில் உங்களுக்கு பதில சொல்கிறேன்…! ” என்று கிளம்பி விட்டேன்.
இரண்டு மாதங்கள் கழித்து எங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. செம ரிஷப்ஷ்ன்.
ஆம்.
என் மனைவி என்னை விட மூத்தவர்.
சரி.
அதனால் இப்போ என்ன..?
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.