எழுதியவர்: நா.பத்மாவதி
தேர்வு செய்த படம்: படம் 3
செம்மஞ்சள் மண்நிறைந்த காடு. சிவந்த வானில் ஒளிரும் வெண்நிலா. மரங்களால் சூழ்ந்த அமைதியான இடம்.
மாயா- இயற்கையை நேசிக்கும் புகைப்படக் கலைஞர். அருண்- நண்பர், இயற்கை ஆர்வலர்
அவர்கள் இருவரும் ஒரு பழைய வனவழியில் பயணிக்கிறார்கள்.
“இது தான் வனவியல் ஆசிரியர் சொன்ன இடம். இந்தக் காடு நாள் முழுக்க அமைதியாகத் தோன்றும். ஆனால் நள்ளிரவில் மட்டும் இங்கே ஏதோ ஒளிச்சுவடு தெரியுமாம்.” என்றாள் மாயா.
“ஓர் optical illusion மாதிரி இருக்கும் போல? அல்லது… இவ்வளவு மரங்கள் கொண்ட இடத்தில் ஒளிச்சுவடு மட்டும் எப்படி தெரியும்?” என்றான் அருண்.
மாயா கேமேராவை எடுத்து பார்த்தபடி, “நீ ஏன் இப்படி பேசற. ஆனால் இந்த ஒளி… பசுமையான மரங்கள் மேல் விழும் நிலவின் ஒளியாகக் கூட இருக்கும்” என்றாள்.
ஒரு மரத்தில் சுருட்டி தொங்கிய காகிதத்தை மாயா எடுத்து
“இதோ பாரு அருண், ஏதோ எழுதியிருக்கு… ‘அழிந்த குரல் மீண்டும் பேசும் இடம். சிவந்த வானத்தின் மௌனத்தில் தேடவும்.’” என எழுதி இருந்தது.
“மாயா, இது யாரோ திட்டமிட்டு எழுதியது போல இருக்கு. இதுல சிக்காதே. இங்க GPS கூட சரியா வேலை செய்யல.” என்றான் அருண்.
“இது நல்ல த்ரில்லிங்கான சிறந்த அனுபவம் இல்ல…?” என சிரித்தபடி மாயா கூறினாள்.
அவர்கள் சிறிது நேரம் காடுக்குள்ளே நடந்து, தூரத்தில் ஒளிரும் நிலவின் கிழே ஒரு பாறையின் அருகே வந்தார்கள்.
“ஏய்…அங்க பாரு அந்த நிழலை… மரமில்ல போலிருக்கு”
என்ற மாயா உன்னிப்பாக கவனிக்க ஒரு மனித உருவம் போல் தோன்றும் நிழல். அவர்கள் அருகே செல்ல செல்ல அசையாத வெறும் மரத்தின் கிளைகள் மட்டுமே அவை எனப் புரிந்தது.
“அடடா! நம்ம மனதின் உணர்வுகள் தான். நிலாவும் சிவந்த வானமும் சேர்ந்து தன்னை காட்டும் காட்சியை பார்த்து பயந்ததினால் மர்மமாக தெரிந்திருக்கிறது.” என தெளிவானான் அருண்.
மௌனமாக நிலாவைப் பார்த்த மாயா “இது மர்மமில்ல… பாரு அந்த நிலவு நினைவுகளோடு யாருக்காகவோ இங்கே காத்திருக்குற மாதிரி இருக்கு.” என்றாள்.
“யாருக்கு?” என எதிர்பார்ப்போடு கேட்டான் அருண்.
மாயாவும் சிரிப்போடு,
“தெரியலையே… எனக்கு”. என்னுள் மறைந்திருக்குற உனக்காகதான் என்று மனதினுள் சொல்லியபடி அந்த மரத்தின் அடியில் அமர்ந்தனர்.
காற்றில் மரங்கள் சில பேசுவதை போல, இருவரும் வெளிப்படையாக சொல்லுங்கள் என்பதாக சலசலக்கின்றன. மரங்களின் மேலே நிலா இருவரின் மனதிற்கும் சாட்சியாக சுழன்றுகொண்டே இருந்தது
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.