எழுதியவர்:ஜெ.எம்.ஜி.ராஜவேல்
தேர்வு செய்த படம்: படம் 2
வனபேசி வானொலி நிலையம்.வணக்கம்.செய்திகள் வாசிப்பது மயிலக்கா. நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் நம் மாபெரும் தலைவர் சிம்ம ராஜா அவர்களின் உரையினைக் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டதைக் இப்பொழுது உங்களுக்காக ஒலி பரப்புகின்றோம்.
“என் பேரன்பு கொண்ட வனமக்களே எல்லோருக்கும் என் முதற்கண் வணக்கம்.(மாபெரும் கரவொலி).நாம் உடலாலும்,உருவத்தினாலும் மாறுபட்டிருந்தாலும், உள்ளத்தினால்
ஒன்றுபட்டிருக்கின்றோம். அதனால்தான் இங்கு பலதரப்பட்ட வனமக்களைக் காண்கின்றோம்.
நம் மந்திரிசபையில் சென்ற முறை நடந்த கூட்டத்தில் முடிவுசெய்து, அமைக்கப்பட்டிருந்த எல்லோயோரப் வனக்காவல் படைகள் மிகச்சிறப்பாக பணியாற்றியதற்காக என் பாராட்டினைக் தெரிவித்துக் கொள்கிறேன்(பலத்த கரவொலி).
மேலும் நம் உளவுப்படையான நரியார்கள்,ஆந்தையார்கள் மிகச் சிறப்பாக உளவு பார்த்து நம் வனக்காவல் படையினருக்கு தகவல் அனுப்பி வைத்தனர்.அதிலும் நம் ஆந்தையார்கள் இரவில் கண் விழித்து நம் கானக எல்லையில் நாட்டு மனிதர்கள் ஊடுருவி வந்தால், தம் வாயால் சமிக்கை செய்து, நம் படையினரைப் அவ்வப்போது எச்சரிக்கை செய்தது மிகுந்த பாராட்டுக்குரிய செயலாகும்(மாபெரும் கரவொலி).நம் கானகத்திற்கு பெரிய ஆபாயம் நாட்டு மக்களால் நடைபெற இருப்பதாக உளவு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.அதைப் பற்றி அடுத்த கூட்டத்தில் தெரிவிக்கிறேன்”.
இவ்வாறு நம் கானக மக்களுக்காக தலைவர் உரையாற்றினார்.
இத்துடன் செய்திகள் நிறைவு பெற்றன.மீண்டும் நாளை மதியம் செய்திகள் ஒலிபரப்பாகும்.
நன்றி,வணக்கம்.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.