எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன்
தேர்வு செய்த தலைப்பு: நிலம்
அந்த கிராமத்தின் சாலை மேம்பாட்டுக்காக சிலரது நிலங்கள் அரசாங்கத்தால் கையக படுத்த அறிவிப்பு வெளியானவுடன் ஒரு சிலர்
மகிழ்ச்சி அடைய , ஒரு சிலர் வேதனை பட்டனர் .
அமைதியாக இருந்த கிராமம் இனி நாள் வழி சாலையாக மாற்றப்பட்டு விடும் . தூசியே இல்லாத கிராமம் , இனி வாகனங்களின் தூசி , மற்றும் புகையினால் இனி அசுத்தமாகி விடும் .
ஒய்வு பெற்று அந்த கிராமத்தின் வம்பளப்பு மகா நாடு நடக்கும் ஆல மரங்கள் கூட சாலை மேம்பாட்டுக்காக தூரோடு அப்புற படுத்த படும் என்ற செய்தி அந்த கிராமத்தின் பெரிசுகளுக்கு பெரிய வருத்தத்தை அளித்தது .
அரசாங்க அறிவிப்பு வந்ததும் , ஒப்பந்த காரர்கள் மிக வேகமாக தங்களது பணிகளை துவங்கினர் .
இரு வருடங்கள் ஓடி விட்டது , ஆட்சி மாற்றத்தின் காரணமாக சாலை பணிகள் எல்லாம் அப்படியே கிடப்பில் போடப் பட்டன ,
இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் அதிகார துஷ்ப்ரயோகத்தில்
ஈடு பட்டு மக்களின் வரி பணம் வீணாக்கப்பட்டு விட்டது என்று எதிர் கட்சியினர் குறை கூறி நடக்க இருந்த பணிகள் எல்லாம் அரைகுறையாக விடப்பட்டன .
நிழல் தந்த மரங்கள் எல்லாம் அப்புற படுத்த பட்டதால் மருந்துக்கு கூட ஒதுங்க நிழல் இல்லை .
சுத்தமான குடிநீர் அந்த கிராமத்தில் வற்றாத குளத்தில் எப்போதும் கிடைத்து கொண்டு இருந்தது , தற்போது கொஞ்ச நஞ்சம் இருந்த சாலை களும் பெரிய வாகனங்கள் அங்கும் இங்கும் சரக்குகளை கையாண்டு
கிராம வாசிகள் வெளியே வரவே அச்சப்பட்டார்கள் .
இதெல்லாம் பார்த்து அந்த கிராம நிலம் எல்லோரையும் பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறது .
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.