பஞ்சபூதங்களின் ஏப்ரல்: எக்காள சிரிப்பு

by admin 2
32 views

எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன்

தேர்வு செய்த தலைப்பு: நிலம் 

அந்த  கிராமத்தின் சாலை  மேம்பாட்டுக்காக  சிலரது நிலங்கள் அரசாங்கத்தால்  கையக படுத்த  அறிவிப்பு வெளியானவுடன் ஒரு சிலர் 

மகிழ்ச்சி அடைய , ஒரு சிலர் வேதனை பட்டனர் .

அமைதியாக  இருந்த  கிராமம் இனி நாள் வழி சாலையாக மாற்றப்பட்டு விடும் . தூசியே  இல்லாத  கிராமம் , இனி வாகனங்களின் தூசி , மற்றும் புகையினால் இனி  அசுத்தமாகி விடும் .

ஒய்வு பெற்று  அந்த கிராமத்தின்   வம்பளப்பு  மகா நாடு  நடக்கும்  ஆல  மரங்கள் கூட   சாலை   மேம்பாட்டுக்காக தூரோடு அப்புற படுத்த படும்  என்ற செய்தி அந்த  கிராமத்தின் பெரிசுகளுக்கு  பெரிய  வருத்தத்தை அளித்தது .  

அரசாங்க  அறிவிப்பு வந்ததும் , ஒப்பந்த காரர்கள்  மிக வேகமாக  தங்களது பணிகளை துவங்கினர் . 

இரு வருடங்கள் ஓடி விட்டது ,    ஆட்சி மாற்றத்தின் காரணமாக   சாலை பணிகள்  எல்லாம் அப்படியே கிடப்பில் போடப் பட்டன  ,

இதற்கு முன்னர்  இருந்த  ஆட்சியாளர்கள்  அதிகார துஷ்ப்ரயோகத்தில் 

ஈடு பட்டு   மக்களின் வரி பணம்  வீணாக்கப்பட்டு  விட்டது  என்று  எதிர் கட்சியினர் குறை கூறி    நடக்க இருந்த பணிகள் எல்லாம் அரைகுறையாக விடப்பட்டன .

நிழல் தந்த மரங்கள் எல்லாம்   அப்புற படுத்த பட்டதால்  மருந்துக்கு கூட ஒதுங்க நிழல் இல்லை . 

சுத்தமான   குடிநீர்  அந்த கிராமத்தில் வற்றாத  குளத்தில்  எப்போதும் கிடைத்து கொண்டு இருந்தது , தற்போது கொஞ்ச நஞ்சம் இருந்த சாலை களும் பெரிய வாகனங்கள்  அங்கும் இங்கும் சரக்குகளை   கையாண்டு

கிராம வாசிகள்  வெளியே வரவே  அச்சப்பட்டார்கள் .  

இதெல்லாம் பார்த்து  அந்த கிராம நிலம்   எல்லோரையும் பார்த்து  சிரித்து கொண்டு  இருக்கிறது .

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!