எழுதியவர்: அ. கௌரி சங்கர்
தேர்வு செய்த தலைப்பு: நெருப்பு
இன்று அவனை தீர்த்துக்கட்டிவிடவேண்டும் என்ற தீர்மானத்தோடு நாயர் கடை முகப்பில் நின்று கொண்டு இருந்த தினேஷ் கயிற்றின் நுனியில் கனன்று கொண்டு இருந்த நெருப்பை தனது பீடிக்கு பகிர்ந்து ஒரு இழுப்பு இழுத்து புகையை ஆனந்தமாக வெளியில் ஊதினான்.
வழக்கம் போல தேநீர் அருந்துவதற்கு வரும் கணேஷ் அன்று அவனுடைய அவனுடைய வளர்ப்பு நாய் டைகருடன் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினான்.
தினேஷ் அந்த ஏரியாவில் ஒரு கும்பலுக்கு தலைவன். கணேஷ் இன்னொரு கும்பலுக்கு தலைவன். திருட்டு, வெட்டு, குத்து என்று பலவிதமான சம்பவங்களுக்கும் இருவருமே காரண கர்த்தாக்களாக இருந்தார்கள்.
முந்தைய தினம் தினேஷ் தரப்பில் நடத்தப்பட்ட திருட்டு பற்றிய தகவலை கணேஷ் தரப்பில் உள்ள ஒருவன் காவல் துறைக்கு அறிவித்ததே தினேஷின் கோபத்திற்கு காரணம்.
கடைக்காரர் தந்த தேநீர் லோட்டாவை கணேஷ் வாங்க முயல தினேஷின் வலது கையில் உள்ள அரிவாள் கணேசின் தலையை நோக்கி சீறி பாய டைகரின் ஒற்றை தாவல் அரிவாளை தூக்கி எறிந்தது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.