ஆழியில் இருந்து வந்த சிற்பியம்மா…
மினு மினுவென மணலோடு ஒட்டி ஜொலிக்குதம்மா…
எதிர்காலத்தை கணிக்க எவனோ ஒருவனின் கையில் விளையாடுதம்மா…
காலத்தின் கணக்கு என்று அவன் விரல், கணக்கு போட்டதம்மா…
அலங்கார பொருட்களாய் வீட்டில் தொங்குதம்மா…
அதன் உராய்வின் சத்தம் அலாதியம்மா…
அலைகள் தந்த அற்புதம் இதுவம்மா…
அழகிய வெண்சிப்பியம்மா.
திவ்யாஸ்ரீதர் 🖋