அட்சய பாத்திரமாய் உன் நினைவும்
அழிக்க முடியாமல் என் மனமும்
தாமரை இலை தண்ணீரை போல் நம் வாழ்வும்
கரையேற கைகளில் துடுப்பிருந்தும் கரையேற மனமின்றி …
ஆள் இல்லாத தீவில்
அழகிய இயற்கை சூழலில்
தண்டு உலாவும் தாமரை பொய்கையில் தனித்து விடப்பட்ட தண்ணீரில் தத்தளிக்கும் படகோட்டி இல்லாத படகினைப் போல் நானும்…
- ரஞ்சன் ரனுஜா(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
