படம் பார்த்து கவி: இரவின் நினைவில்

by admin
130 views

புலரும் பொழுதில்
விரியும் இலைகள்

இரவின் சுகத்தின்
இனிய நினைவில்

அகத்தில் உணர்ந்ததை
புறத்தில் காட்டும்

அன்புத் துளிகள்
பன்னீர்த் துளிகள்

குளுமையைக் காட்டுது
வெளுமையற்ற பச்சை!

கவிஞர் சே.முத்துவிநாயகம்
திருநெல்வேலி

You may also like

Leave a Comment

error: Content is protected !!