படம் பார்த்து கவி: எத்துனை நேரம்

by admin 1
55 views

எத்துனை நேரம்
ஓடியிருக்கும் கையில்
சிக்காமல்

தன் உயிரை காப்பதற்காக

மேல் மூச்சுவிட்டு
கீழ் மூச்சு வாங்குவதற்குள்

தலை திருகி
நெருப்பில் வாட்டி

இதோ வெந்து கொண்டு
இருக்கிறது காரசாரமாக

கடிக்க ஏதுவாக சதைப்பகுதி மட்டும்

கோழி வெட்டியவன்
கைகளில் சிறிதாய்
ஒரு காயம் அப்போதும்

கோழியின் வலியை உணரவில்லை

ருசித்து புசித்து கடித்து
சாப்பிடவே காத்திருக்கும் ஒரு கூடடம்.

அமிர்தம் ரமேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!