ஏனோ இப்போதெல்லாம்
வானில் சூரியன் இல்லையென்று !
வருத்தப் பட்டு கொள்கிறாய்?
கவலைப் படாதே
உரிமைகள் மறுக்கப்படும் போது
உன்னையும் அறியாமல்
வாழ்வுக்காக சாகும் வரை போராடுவாய்
அப்போது
உன் உள்ளத்தில் கதிர் வீச்சுடன்
பிரகாசத்துடன் உதயமாகும்
ஒரு உதயச்சூரியன்!!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
