படம் பார்த்து கவி: கள்ளம் கபடமற்ற

by admin 1
44 views

கள்ளம் கபடமற்ற
சிரிப்பை உடைய
இனிய குழந்தையே
உன் உடல் வெப்பம்
தணிக்க
உன்தாயின் பூப்போன்ற கைகள்
உன் பஞ்சு போன்ற
உடலில் பட்டு
தண்ணீரும் பன்னீராய்
உன் மேனி தழுவியதே

அது மட்டுமா
சவர்க்கார
நுரைகளும்
குமிழ் குமிழ்லாக
பறந்தனவே

அழகிய குழந்தையே
இக்குளியல்
நீடித்தால்
கங்கையும்
கரை புரள்வாள்
உன் மேனி தொட்டுவிட
உன் தாயும்
பரவசம் அடைவாள்
நீ ஆனந்த மழையில்
நனைவதை பார்த்து….
M. W Kandeepan ✍️

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!