படம் பார்த்து கவி: கால வெள்ளத்தில்

by admin 1
41 views

கால வெள்ளத்தில் மிதக்கும்
காற்றடைத்த பந்தாய் மனித வாழ்வு
பாதை ஏதும் அறியாது
பயணம் அது தொடருது
கரை ஒதுங்கும் நேரம்
பயணம் அது முடியும்

அலை விட்டு அலை
தறிகெட்டு ஓடும்
எதிர் காத்து வந்தால்
பயணத்திசை அது மாறும்
காற்றோடும் கரையோடும்
உறவாடும் சில நேரம்
ஆற்றில் வெள்ளம்
அதிகமானால் பந்தின்
உயரம் கூடும்

தண்ணீரில் தத்தளிக்கும்
சிறு பூச்சி பந்தில் ஏறி
பயணமாகும்
தந்தி தாவும் தட்டானும்
பந்தில் கொஞ்சம்
இளைப்பாறும்
பந்தின் பயணம்
பந்துக்கு எங்கு புரியும்

சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!