படம் பார்த்து கவி: கொலுசு

by admin 1
61 views

வெண் நீலவானில்
கலையும் கருமேகமாக
கவலையான மனதை
களையும்  இசையாக
காரிகையின் கால் கொலுசு

பாவை உந்தன்
பாதம் தீட்டிய
சிவந்த நலங்கு
ஓவியத்தில் பளிச்சிடும்
முத்தான கால் கொலுசு

கடைக்கண் பார்வை
கார்மேக குழல்
பூவையின்  புன்னகை
நாட்டிய நவரசம்
அத்தனை அழகையும்
மிஞ்சி காற்றில்
தவழ்ந்து என்
காத(தி)ல் சொல்லும்
கன்னியவள் கால் கொலுசு

பத்மாவதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!