சுதந்திரமாக பறக்க
நினைத்த கோழி
விருந்தில்
உயர்ந்த வகை
உணவாக
இருக்கிறதே
காலை பொழுதை
வரவேற்காது
இறந்து பதபடுத்திய
உணவாக
உள்ளதே
நன்பர்கள் ஒன்று கூடி
இதனை உட்கொன்டு
மகிழ போகின்றார்களா
வயிற்றுக்குள்
இறந்த உடல் செல்லபோகின்றதே
அவர்கள் வயிறு என்ன சுடலையா
இங்கு ஒரு இழப்பு
சந்தோஷமாக
மாற்றபடுகின்றதா
இறந்து கிடப்பது
கோழிமட்டும்மா
இறந்து கிடப்பது
நம் இரக்கமும்தான்
இது தான்
இயற்கை நியதியா..
M. W Kandeepan🙏🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
