படம் பார்த்து கவி: செம்பருத்தி

by admin 3
86 views

செம்பருத்தி பூவின் வாசமும்

சேலை கட்டும் பெண்ணின் நேசமும்

செவ்விதழ் கொண்டவளே

இதயத்தின் ராணியே

உதயத்தில் மலருபவளே

மஞ்சள் பிள்ளையாரின்
உச்சியில் இருந்து
மங்கலம் தருபவளே

மங்கையவளின் பின்னலில்
இருந்து மயக்கம் தருபவளே

மாயக் கிளியே

மயங்கி கிடக்கிறேன்
உன் காலடியில்உன் இதழ் தந்து
என் இதயத்தை காத்திடு

அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!