படம் பார்த்து கவி: துளிகளுக்குள்

by admin 1
101 views

துளிகளுக்குள் வாழ்கிறோம்


அடர்ந்து ஓய்ந்த பெருமழையொன்றும்

நம்மோடு பயணித்த தில்லை

சிறு இலை நுனியில்

பெரும் பாறை உடலில்

நிலம் தேக்காத வெட்டையில்

குமிழிகள் உடையாத நீரிலென

பிரிந்து கிடக்கும் துளிகளை

யார் யாரோ சேகரித்து கொண்டிருக்கலாம் …

சாலையோர நடைப் பயணத்தில் கிளையசைத்து

காலணி அணியாத பாதத்தில் ஈரம் இழுத்து

அசைந்து போன கால்களுக்கு ஓய்வு கொடுத்து

ஒவ்வொரு துளியாக ரசிக்கும் மனம்

தன் வாழ்விலிருந்து ஓய்வெடுத்துக் கொள்ளவே

இந்த மழை விட்டு செல்கிறது

காற்றெங்கும் தன் துளிகளை …….

நிழலி🌺

You may also like

Leave a Comment

error: Content is protected !!