நாளை விடியுமா?
என்பது
நாம் வாழும்
வாழ்க்கையை போன்றே
கேள்விக்குறியானது
மரிப்பதற்கு முன்
ஞாபகர்த்த நினைவுச்சின்னமாய்
உன் கைகோர்த்து
ஒரே ஒரு புகைப்படம் எடுத்து
சலிக்க,சலிக்க பார்த்து
அந்நொடியே
செத்து விடும் வரம்
கிடைக்க வேண்டுமடி!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
