படம் பார்த்து கவி: பத்து மாதம் சுமந்தாள்

by admin 1
60 views

பத்து மாதம் சுமந்தாள்
பத்தியம் இருந்தாள்
பல வலிகளை பொறுத்து கொண்டு
பெற்றெடுத்தாள்
பால் கொடுத்தாள்
தாலாட்டினாள்
கழிவுகளை அகற்றி
சுத்தப்படுத்தினாள்
எல்லாம் எனக்காக செய்த
மனித தெய்வம் அவள்
நுரைக்கும் நினைவுகளாய்
மணக்கும் சோப்பின்
நீங்காத வாசனையாய்
அடி நெஞ்சில்
அழியாத கோலமாய்
அன்னையவள்
ஆன்மாவில் கலந்திருக்கிறாள்!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!