படம் பார்த்து கவி: பாலை

by admin 1
63 views

வறண்ட பாலை
வரைந்த கோடுகள்
புவியின் முதிர்ந்த
முகச் சுருக்கத்தால்
தேய்ந்த முதுமையின் சாயல்

ஆதவனின் உக்கிரம்
அந்திவானில் மறைய
தாகம் தணிய
தண்ணீரைத் தேடிய
குடிநீர் குழாய்க்குள் காற்று

தாங்க முடியா
தாகத்தில் தண்ணீருக்காக
காத்திருக்கும் பாவப்பட்ட
வறண்ட பாலையான நான்….

என்றோ ஒருநாள்
வான்மகளின் வருகையில்…..
வசந்தமில்லாப் பாலை
வண்ணமலர் பூக்கும்
சோலையாவது உறுதி

பத்மாவதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!