படம் பார்த்து கவி: பாலைவனச்சோலை

by admin 1
38 views

பாலைவனச்சோலை
மாடி வீடு கட்டணும்னு
மனக்கோட்டை கட்டி
மணல் நகரம் வந்தேனடி
ராணி போல வாழவைக்க
ராசாத்திக்காக வந்தேனடி
அடுக்கு மாடி கட்டிடம் தான்
அடிக்கும் வெய்யுளுக்கு மின்னுதுங்க
அடுக்கு மாடி கட்டிலில் தான்
எங்க வாழ்க்கை போகுதுங்க
ஒத்த ரொட்டி கொடுத்துப்புட்டு
ஒட்டகத்தை மேய்க்க சொல்லுறான்
சூடு மணல் காற்றினிலே
எந்தன் இளமை கருகுதடி
தண்ணி புட்டியிலே குடிச்சாலும்
ஓடுற தாமிரபரணி போல வருமா
வருஷம் தான் போகுதடி
வயசும் தான் கூடுதடி
கடனும் தான் அடையலை
கடமைதான் முடியலை
வாயை கட்டி சேர்க்குறேன்
ராசாத்தி உனக்காக தானடி !
சீக்கிரமா வந்துடுறேன்
காதலோடு காத்திரு ராசாத்தி
அன்பை கொட்டி தீர்க்க தான்
ஆசையோடு மச்சான் வருவேன் !

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!