படம் பார்த்து கவி: பொற்றாமரைப்

by admin 1
60 views

பொற்றாமரைப் பாதம்
பூமியில் பட்ட நேரம்
எட்டாண்டு காலம்
நான் பட்ட இன்னல் தீரும்

இல்லை ஒரு பிள்ளை என்று
எள்ளி நகை யாடியவரும்
இனி ஏளன பேச்சுக்கு
யாரைத்தான் தேடுவரோ?

பிள்ளை பேறு பெறுவது
உலக மகா சாதனையாய்
ஆனதன் காரணம் ஏதும்
நானறியேன்

மகரந்தச்சேர்க்கை யாலே
மானுடம் தலைத்ததெல்லாம்
மருந்தால் ஆனதனால்
பொற் தாமரை மலர
எட்டாண்டு ஆனதுவோ?

சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!