படம் பார்த்து கவி: முதல் பிடியில்

by admin 1
58 views

முதல் பிடியில் அ என்றாள் அன்பே என்றேன்..

இரண்டில் ஆ என்றாள் ஆம் நீயேதான் என்றேன்

மூன்றில் இ என்றாள் இளித்து நின்றேன்

நான்கில் ஈ என்றாள் ஈகையில்லையா என்றேன்…

ஐந்தில் உ என்றாள் உன்மத்தம் நானேன்றேன்..

ஆறில் ஊ என்றாள் ஊமை காதலன் பாவமென்றேன்..

ஏழில் எ என்றாள் எள்ளி நகைக்காதடி என்றேன்..

எட்டில் ஏ என்றாள் ஏந்திழையை அணைக்கவா என்றேன்..

ஒன்பதில் ஐ என்றாள் ஐயம் வேண்டாமடி என்றேன்..

பத்தில் ஒ என்றாள் ஒத்துக்கொள்ளடி என்றேன்..

பதினொன்றில் ஓ என்றாள் ஓங்காரம் நீதானடி என்றேன்..

பனிரெண்டில் ஔ என்றாள் ஔடதமற்ற விஷமென்றேன்…

பதிமூன்றில் ஃ என்றாள் அவளின் முப்பாற்றிபுள்ளியின் உரிமைக்காரனென்றேன்!

உயிரெழுத்தாய் உயிர்த்தெழுந்தே
குறிலாய் குமைந்து
நெடிலாய் நெருங்கி
மெய்யாய் சமைந்து
உயிர்மெய்யால் உணர்ந்து
தமிழாய் பிறக்கவா
உன்காலில் சரணடையவா..

❣️ கேடி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!