படம் பார்த்து கவி: முத்து

by admin 1
53 views

ஆழ் கடலுக்குள் முங்கி
மூச்சடக்கி

கண்டெடுத்துக் கொண்டு வந்தேன்
சிப்பிகளை

சீர் செய்ய கிடைத்த
முத்துக்களை

அழகழகாக தரம் பிரித்து
கோர்த்தேன்
முத்துச்சரங்களை

அங்காடியில் பார்வைக்கு வைத்திட்டேன்

மங்கை மடந்தை
பேரிளம் பெண்கள்

சங்கு கழுத்தை அழங்கரிக்கவே வாங்கி
செல்ல

ஆடவரும் ஆடவளுக்கு
அணிந்து பார்க்க
விலை கொடுத்து
வாங்கிச் செல்ல

மூச்சடக்கி வந்த முத்து
என் வாழ்வை வளப்படுத்த ஆனந்தம்
நிறைந்தது

அமிர்தம் ரமேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!