படம் பார்த்து கவி: வானவில் விரல்கள்

by admin 1
58 views

அடம் பிடித்து உன் விரல்களை
படம் பிடிக்க விரதமிருந்தேன்,!

பிரம்மன் தேர்வெழுதி வடித்த
உன் விரல்களின் நகத்தின் மேல்
செயற்கை சாயம் எதற்கடி,;!

வானவில்லின் வண்ணங்களை
ஒன்று சேர்த்து படைத்து விட்டான்
உன் விரல்கலை,;!

பிரம்மனின் கூற்றுப்படி
நீயே அவன் தவப்புதல்வி,;!

உனை சுமந்தவளுக்கு தான்
புரியும் உனை பெற்றது
ஏழு ஜென்ம வரம் என்று,!

விரல்களை விட்டு பிரிய மனமின்றி
வானவில்லும் வண்ண வடிவங்களில்
வலையமிட்டு தன்னுள்ளேயே
தஞ்சமடைந்து விட்டன,!

இந்த விரல் பிடிப்பவர்கள் பல
ஜென்ம பாக்கியம் செய்திருக்க
வேண்டும் படைக்கப்பட்டவனால்.!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!