எழுதியவர்: ஆதி தனபால்
பழமொழி: தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை
முதன் முதலா வெளி நாட்டுக்குப் போனது எம் மகன் தான் பூரித்துக் கொண்டாள் தனம்.அந்தப் பூரிப்பில் பகட்டில்லை ,எங்கேயோ ஒரு குக்கிராமத்தில பொறந்து வளர்ந்து அந்த ஊர்ல இருக்குற அரசுப் பள்ளியில படுச்சு ,கஷ்டப்பட்டு இன்னக்கி முன்னேறியிருக்குற தன்னோட மகன நெனச்சுப் பெருமைப் படாம இருக்க முடியுமா?
பொறக்கும் போது எந்தக் குறையும் இல்லாமத்தான் பொறந்தான்.ஒரே நாள் காய்ச்சலில் விழுந்த அவனுக்கு இப்படியாகும்னு யாரும் நெனச்சுகூடப் பார்க்கல ..
போலியோ நோய் தாக்கத்திற்கு ஆளாகி ஒரு கால் பாதிக்கப்பட …அவனுக்கு ஊனம் என்ற பட்டப்பெயர் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த , அதிலிருந்து விடுபட படாத பாடு பட்டவள் தனம்..
சின்னப்புள்ளையிலிருந்தே அவனுடைய வேலைகளைத் தானாகவே பார்த்துக் கொள்ளப் பழக்கியதால் ஊனமென்ற சொல் நாளடைவில் மறந்தே போயிடுச்சு அவனுக்கு..
படிப்புல சுட்டி என்பதால் இன்ஜினியர் ஆகனும்னு என்ற கனவு நனவானதால் ,பிடிச்ச படிப்பை பிடிவாதமாய்ப் படித்தான்.. காலத்தின் சுழற்சியில் கண்மூடிக் கண் திறக்கும் முன் வருடங்களும் கடந்து போய்க்கொண்டிருந்தது..
படிச்சு முடிச்ச கையோடு வேலையும் கிடைக்க,பட்டணத்து தேசத்தின் வாசகன் ஆனான்.. அம்மாவையும் , தம்பியையும் கூடவே கூட்டிட்டுப் போக,”திக்குத் தெரியாத இடத்துல போய் என்ன செய்யப்போறோம்னு தெரியல” எனப் பதற்றத்துடன் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினாள் தனம்.
“மொத மொத ரயில்ல போகப்போறோம் எப்படி இருக்கும்னு தெரியல.. ரயிலையெல்லாம் பக்கத்து வீட்டு டி.வியில பாத்ததோட சரி..அது எப்படிப் போகும்னுகூடத் தெரியாது.. “
“ஏம்ப்பா அதுல …அதான்..கேக்க முடியாமல் இருத்தாள்.. “
“அம்மா,பாத்ரூம்லாம் இருக்கும்மா..பக்கத்துல புடிச்சுக்கிறதுக்கு கம்பியெல்லாம் இருக்கும்மா..நீங்க ஒன்னு பயப்படாதீங்க” என்றான் சின்னவன்..
ஒருவழியா ரயில்ல ஏறிப் பயணத்ததைத் தொடங்கினாள் தனம். ரயிலின் ஆட்டம் அவளுக்கு குடலைப் பிரட்டிக் கொண்டு வந்தது.அவளால் தூங்க முடியவில்லை. சின்னவனை மடியில் படுக்க வைத்துக் கொண்டு , “நீ தூங்குப்பா என்றாள்”.
ரயிலின் ஆட்டத்துடன் தான் பட்ட கஷ்டங்களெல்லாம் இன்றுடன் முடியப் போகின்றது என நினைத்த மாத்திரத்தில் , அருவியாக்க் கொட்டிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்..
ராத்திரியெல்லாம் தூங்காமலேயே பட்டணத்தின் வாசலை மிதித்தாள்.. கையில் காலைத் தாங்கிக் கொண்டு நடந்த மூத்த மகனைப் பின் தொடர்ந்தாள்..
நெருங்கின சொந்தம்,”வீடு பாத்து போற வரைக்கும் இங்கேயே தங்குங்க “என்று கூற ஒரு வாரத்துக்ளுள்ள சின்னதா ஒரு வீட்டப் பாத்துக் குடி போயிட்டோம்…
இவன் வேல பாக்குறத பாத்துட்டு சம்பளமும் நெறயா கொடுத்தாங்க… சில வருடத்திற்குள்ளேயே பிளாட் ஒன்னு சொந்தமா வாங்கி சொந்த வீட்டுக்குச் சொந்தக்காரியா ஆக்கிட்டான் எம்புள்ள.. தம்பியையும் நல்ல காலேஜில சேர்த்துப் படிக்க வச்சு வேலையையும். வாங்கிக் கொடுத்துட்டான்..
“ வயது ஏறிக்கிட்டே போகுது பொண்ணு பாக்கலையா?”எல்லோருமே கேக்க ஆரம்பிச்சுட்டாங்க..
“ சொந்தங்களெல்லாம் சின்னவனுக்குத் தாரோம்…பெரியவனுக்கா, என இழுத்தது…”
தனத்திற்கு கவலை இப்பொழுது ரெண்டு மடங்கு அதிகமானது. வேண்டாத தெய்வமில்ல போகாத கோவிலில்ல..
ஆனால் அவனுக்கு இதெல்லாம்பெரிய விசயமில்லை.. “அப்பா இறக்றப்ப நம்ம புள்ள அறிவாளி அவன் உங்களயெல்லாம் காப்பாத்திடுவான்னு “ சொன்னத உண்மையாக்கிக் காட்டிவிட்டான்…
கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு அவனப் பாத்துக்கிற மாதிரி பொண்ணு கெடச்சா போதும் என்பதில் தனத்திற்கு மாறுபாடு ஒன்றுமில்லை. எப்பிடியோ தேடிப்பிடிச்சு சரியான ஜோடிய அவனுக்கு கல்யாணத்தையும் செஞ்சு வச்சு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்..
திடீரென வெளிநாடு போற வாய்ப்புக் கிடைக்க,அம்மாவ விட்டுட்டு எப்படிப் போறதுன்னு தயங்கினான்..
“ தம்பி பாத்துக்கிடுவான் நீ போய்ட்டு வாப்பா “என அம்மா கூற தன் மனைவியை அழைத்துக் கொண்டு முதன் முதலாக விமானத்தில் பறக்க…
அதைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனாள்.. தன் மகனைப் பிரிந்து வாழ்வது ஆரம்பத்தில் கடினமாகத் தெரிந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அதுவும் பழகிவிட்டது..
தினந்தோறும் செல்போனில் வீடியோ காலில் பேசித் தன் மகனின் நலத்தை விசாரித்துக் கொள்வது வாடிக்கை..
இப்படியே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது..
திடீரென தனத்தின் உடல்நிலை பாதிப்படைய,மகனை விட்டு ஒரேயடியாகப் பிரிந்து போய்விடுமோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.. ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்…
@அம்மாவின் கைகளுக்குத் தங்க வளையல் செய்து போட வேண்டும் “ என தன் தம்பிக்கு பணம் அனுப்பி செஞ்சு கொடுக்கச் சொன்னான்.. தன் மகனின் பாசத்தில் பூரித்துப் போனாள் தனம்..
கைகளில் வளையலைப் போட்டு வீடியோ காலில் தன் மகனிடம் காட்டினாள்.. தன் மகனும்,மருமகளும் அருகில் இல்லை என்றாலும் இந்த வீடியோகால் அவர்களை அருகிலேயே வைத்திருந்தது…
“ அம்மா..இந்த வருசம் உங்களப் பாக்க வந்திடுவேன் …”என்றதும் ஆயிரம் விண்மீன்கள் தனத்திற்கு ஒளி கொடுத்தது போலிருந்தது..
தன் மகன் வர்ற வரைக்கும் எப்படியாவது உயிரக் கையில் பிடித்துக் கொண்டுருந்தாள் தனம்..ஆனால் அவள் நினைத்தது நடக்கவில்லை… கடவுளின் கணக்கு தவறாகிப் போக … மகனுக்காக வாழ்ந்தவளின் இதயம் துடிப்பை திடீரென நிறுத்த, சின்னவன் என்ன செய்வதென்ற தெரியால் துடித்துப் போனான்…
தாயின் முகத்தை வீடியோகாலில் பார்த்துப் பார்த்துக் கதறினான்.
அன்பு தொட்டுப் பார்க்க முடியாமல் அடைபட்டுக் கிடந்தது செல்பொனுக்குள்…
முற்றும்.
📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.