பழமொழி போட்டி கதை: சென்றதினி மீளாது 

by admin 2
142 views

எழுதியவர்: நா.பா.மீரா

பழமொழி: அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது


மாணவர்களே,எல்லோருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.ஆறாம் வகுப்பு -அ பிரிவில் மதபோதனை வகுப்பிலிருந்த ஆசிரியர் மாதவன் சொல்ல குழந்திகல்கொரசாகநன்றி கூறினர் .

குழந்தைகளின் ஆரவாரமும்,சலசலப்பும் அடங்கியவுடன் …சரி உங்களுக்கெல்லாம் எதிர்காலத்துல நா இப்படி வரணும்னு ஒரு கனவு இருக்குமில்லையா? எங்க ஒவ்வொருத்தரா எழுந்திருச்சுச் சொல்லுங்க 

டாக்டர், ஐ.ஏ.எஸ்.,வக்கீல் , ஆசிரியர் இப்படி ஒவ்வொருவராகச் சொல்ல ஒரு மாணவன் மட்டும் அமைதியாயிருந்தான்.

செந்தில், உன்னோட எதிர்காலக் கனவைச் சொல்லேன் கேட்போம் ,அவனை ஊக்குவித்தார் ஆசிரியர்.

தயங்கியவாறே,என்னோட முயற்ச்சிக்கும், திறமைக்கும் ஒத்து வர்ற படிப்பைப் படிப்பேன்.ஆனா,எதைப்படிச்சாலும் மேலோட்டமா இல்லாம ஆழமா,அடிப்படைய நல்லாப் புரிஞ்சுக்கிட்டு மனசில நல்லப் பதிய வைக்கணும்பாரு எங்கப்பா.

அது மட்டுமில்ல ஒழுக்கம் ரொம்ப முக்கியம்னு சொல்லியிருக்கார்.சின்னவயசுலேருந்து நேரத்தொடேழுந்து குளிச்சு, சாமி கும்பிட்டப்புறம்தான் சாப்பிடவே விடுவார்.

வெரி இண்டரெஸ்டிங்…மாதவன் சொல்லும்போதே பள்ளி விடுவதர்க்கானமணி அடித்தது. அப்பா..அப்பான்னே சொன்னானே..ஒருவேளை அவனுக்கு அம்மா கிடையாதோ?எண்ணியவாறே வீடு நோக்கி சைக்கிளை மிதித்தார்மாதவன் .

மாதவனுடைய செல்ல மாணவன் ஆகிவிட்டான் செந்தில்.அவன் வகுப்புக்குச் செல்லாத நாட்களில் கூட அவனைக்கூப்பிட்டு வைத்துப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் அவர்.

அன்று செந்தில் பள்ளிக்கு வரவில்லை.தொடர்பு கொள்ள வழி இல்லாமல் போக, பள்ளி முடிந்து நேரே அவன் வீட்டிற்கே சென்றுவிட்டார்.

கதவைத் திறந்த இளைஞரிடம் …செந்தில் இல்லையா?

நீங்க..தயங்கியவாறே விசாரிக்க.. நான் செந்திலின் அறிவியல் ஆசிரியர்.அவன் ஏன் இன்னைக்குப் பள்ளிக்கு வரல …என்றுகேட்டவரி ஆச்சரியமாகப் பார்த்து உள்ளே அழைத்து உட்கார வைத்தான். 

பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்த செந்தில், சார் நீங்களா? விழிகளில் ஆச்சரியம் மின்னக் கேட்டவனிடம் ..தினமுமுன்னோட பேசிப் பழகிடுச்சா … இன்னைக்கு நீ லீவ்னு தெரிஞ்சதும் நானே உன்னைப்பார்க்க வந்துட்டேன் .

எனக்குக் கொஞ்சம் சுரமா இருந்தது ..அப்பா லீவ் போடச் சொல்லிட்டார் . இருவரையும் விழியகல நோக்கியவனிடம், அப்பா … இவரு எனக்கு அறிவியல் ஆசிரியர்  மட்டுமில்ல நல்ல தோழர் கூட ..தெரியுமா?

மிஞ்சி மிஞ்சிப்போனால் முப்பது வயது கூட இருக்காது.. இவரைப்போய் அப்பாங்கிறானே?

மாதவனின் சந்தேகத்தை சரியான அலைவரிசையில் இனங்கண்டு கொண்டவான்… செந்தில் நீ  போய் ரெஸ்ட் எடு ..நா சார்கிட்ட பேசிட்டு இருக்கேன்.

எம் பேரு பழனியப்பன், விவசாயத்துல முதுகலை முடிச்சுட்டு … எங்க சொந்த நிலத்துல விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கேன். உங்க பேரு …

மாதவன் … இன்னமும் விழிகளில் கேள்வியுடனே இருந்தவனிடம் …

உங்களுக்கு ..செந்திலோட பின்புலம் தெரியணும் அவ்வளவுதானே?முதல்ல டீ….அப்புறம் பேசலாம். உள்ளே சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ஆவிபறக்கும் டீ மற்றும் ஒரு பிளேட்டில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் கொண்டு வந்தான். டீ சூப்பர் … வீட்டுல வேற யாருமில்லையா?

ஆமா .. நானும் செந்திலும் மட்டும்தான். நா ஒரு கோர விபத்துல அண்ணா, அண்ணிய இழந்துட்டேன். செந்திலுக்கு நாலு வயசு…அப்பா, அம்மாவ இழந்து …. பேசும்போதே கண்களில்நீர் குளம் கட்டகட்ட குரலும்கமரியது.

சாரி சார் … நா வேற உங்களைத் தேவையில்லாம சங்கடப்படுத்திட்டேன். நீங்கதான் செந்திலோட மொத்தப் பொறுப்பும் … அண்ணா பையன்கிறதால உங்கள அப்பான்னு கூப்பிட்டுப் பழகிட்டான் , அப்படித்தானே..

ஆனால் பழனியப்பன் கூறிய மறுமொழியில் இமைக்கவும் மறந்தான் மாதவன். 

விடைபெற்ற மாதவனிடம் , செந்தில் மாதிரியே எனக்கும் உங்கள ரொம்பப் பிடிச்சிருக்கு, அடிக்கடி வாங்க மாதவன் என்று நட்புக் கரம் நீட்ட…

கண்டிப்பா பழனியப்பன்,கைகுலுக்கி விடைபெற்றான்.

வீடு வந்து சேர்ந்து ரொம்ப நேரம் மனைவி மற்றும் பெற்றோரை இழந்து தங்களுடன் வசிக்கும்ஒன்றுவிட்ட   தங்கை வள்ளியிடமும் யாரோ ஒருவர் பெற்ற பிள்ளைக்குப் பொறுப்பேற்றிருக்கும்பழனியப்பனைப் பற்றியே சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தான் மாதவன்.

ஒருவேளை செந்தில்  அனாதையான காரணம் தெரிந்தால்?

அன்றிலிருந்து செந்தில் மீது இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி கவனித்துக் கொண்டான் மாதவன் பாடங்கள் அனைத்தும் அவன் மனதில் ஆழப் பதியும்படி செய்வதில் தீவிரமாயிருந்தான். 

‘பிரெண்ட்ஸ் ,நாமெல்லாம் இன்னைக்கு இருக்குற மாடர்ன் டெக்னாலஜியைப் பயனடுத்தி விளைச்சல் மற்றும் மகசூல் பெருக்குறதப் பத்தி யோசிச்சிட்டிருக்கோம் . நல்ல விஷயம். நீங்கல்லாம் இந்த சமுதாயத்தோட விதைநெல் . உங்க வளர்ச்சிதான் இப்போதைய முக்கியத் தேவை .

அதனால், பட்ட அறிவும், அனுபவமும் ஒண்ணு சேரணும்..அப்படிங்கற நோக்கத்துல அக்ரி காலேஜ்லேருந்து எங்க பார்ம் தேடி வந்திருக்கிற உங்கள எங்க மூத்தவிவசாயிகளோட குழுவாப் பிரிக்கப்போறேன் . கோ அ ஹெட் அண்ட் ஷேர் யுவர் ஐடியாஸ் …

சாரி டா மாதவா ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேனா? என்று கேட்டுக்கொண்டே வந்தவன் அவன் அருகிலிருந்த இளம்பெண்ணைக் கண்டு தயங்க …

டேய் பழனி …என் தங்கச்சி வள்ளி .. வயல் சுத்திப் பார்க்கப்போறேன்னு சொன்னதும் நானும் வரேன்னு கிளம்பிட்டா…

கை கூப்பி, வாங்க வெல்கம் டு அவர் பாமிலி .

மாதவனைப்  பார்த்தவுடன் தூரத்திலிருந்து ஓடி வந்தான் செந்தில். வள்ளியுடன் சிறிது நேரத்திலேயே நெருக்கமாகிவிட்டான் .

நானும் டீச்சர் தான் …ஆனாலும் நீ மாணவர்களை அணுகற விதம் சான்சே இல்லடா என்று சொல்லி, பழனியப்பனைக் கட்டிகொண்டான் மாதவன். 

செந்திலை ஒட்டி சந்தித்த மாதவனும், பழனியப்பனும் குறுகிய காலத்திலேயே நெருங்கிவிட்டனர். 

அன்று அண்ணனுடன் சென்று சந்தித்த நொடியிலிருந்து செந்திலையும், 

பழனியப்பனையும் வள்ளிக்கும் மிகவும் பிடித்துவிட்டது. 

சார்.. இப்பல்லாம் நீங்க அப்பாவோடதான் நெறைய டைம் ஸ்பென்ட் பண்றீங்க …என்று சிணுங்கியவனை அணைத்தவாறே …. டேய் செந்தில் …ஸ்கூல்லதான் சார்…மோரேல்லாம் … வீட்டுக்கு வந்தா அங்கிள்தான் சரியா ?

சரி அங்கிள் என்று சொன்ன செந்திலுக்கு அவ்வளவு சந்தோசம் … ஒரு புறம் புரியாத வயதிலேயே ஆழ மனதில் பதித்த பழனியப்பன், மறுபுறம் இதோ அங்கிள் என்று உறவு சொல்லி விளிக்கச் சொல்லும் மாதவன், அதிலும், அப்பாவின் நெருங்கிய தோழனாய்.

பழனி,நீ ஏன் ஒரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாது …நம்ம செந்திலுக்கும் ஒரு நல்ல அம்மா கிடைப்பாங்க இல்ல?

வாடா…காதாட வெளிய போயிட்டு வரலாம்…

மாதவா… ரொம்ப வருஷமா எம்மனச அழுத்திட்டிருக்கிற பாரத்த இன்னைக்கு உன்கிட்ட இறக்கி வைக்கப்போறேன்.

பெற்றோரை இழந்தநிலையில செந்தில அப்பா ஸ்தானத்திலிருந்து வளர்க்கிறது மட்டும்தான் உனக்குத் தெரியும் ….

ஆனா ஒரு பெரிய சாதிக்கலவரத்துல நண்பனோட காதலுக்காகப் பரிந்து பேசப்போய் … அநியாயமா புள்ளத்தாச்சியா இருந்த அண்ணியோட சேர்ந்து உசிர விட்டாரு என்னோட அண்ணன்.

என்னடா சொல்றே பழனி?

எங்க அண்ணாவோட பிரெண்டு மருதநாயகம், வேற்று சாதிப் பொண்ணக் காதலிச்சார்.  

டேய் மருது …சொன்னக் கேளு.. அந்த ஆதிமூலம் சாதிவெறி பிடிச்சவன். அவன் தங்கை உனக்கு வேண்டாம். வேற நல்ல பொண்ணா பார்க்கலாம்டா .

அண்ணன் எவ்வளோ சொல்லியும் மருது அண்ணன் பிடிவாதமா இருக்க … வேறுவழியில்லாமல் … என் அண்ணன் போய்ப் பேச … ஒரே அடிதடி .. சாதி விட்டு சாதி காதல் கேக்குதா … என்று முதல்ல காதலிச்ச ரெண்டுபேரையும் வெட்டிட்டு…தூது போன அண்ணனையும் குறுக்கே வந்த புள்ளத்தாச்சி அண்ணியையும் வெட்டி சாச்சுட்டான் .

அப்பவும்,ஆதிமூலத்தோட அகோர சாதிப்பசி அடங்கிச்சா தெரியல .

தன் இனத்தைச் சேர்ந்த ஆதிமூலத்தை  போலீசில் சிக்காமல் காப்பாற்றிவிட்டார் அந்த கிராம முன்சீப் .

சாதிவெறியில் கணவன் ஒரு கர்ப்பிணியை வெட்டிச் சாய்த்ததைப் பொறுக்காத மனைவி சாப்பாட்டில் விஷம் வைத்துக் கணவனுடன் சேர்ந்து தானும் மாண்டாள். 

அண்ணனையும், அண்ணியையும்கொன்னவங்க குலத்தையே நாசமாக்கிடனும்கிற வெறியில, யாருக்கும் தெரியாம காலேஜ் ஹாஸ்டல் லேருந்து யாருக்கும்தேரியாம ஊருக்குப் போய்,  அந்த ஆதிமூலத்தோட வீட்டுச் சுவரேறி குதிச்சு உள்ள போய்… அந்த இருட்டுல …நிதானமா உள்ள போனா …. ம்மா…ம்மா..ங்கிற குழந்தை அழுற சத்தம். ஆனா அவங்ககிட்ட அசைவே இல்லாதமாதிரி…டார்ச் அடிச்சுப் பார்த்தா … ஆளுக்கொரு மூலையா… புருசன் ..பொண்டாட்டி இறந்து கிடக்க… சற்று தொலைவில் ஒரு விஷபாட்டில் ….

நா எதுவும் செய்யாமலே அவங்க சோலி முடிஞ்சிருந்தது .

பசியால அழுதோன்னு சுத்திமுத்திப் பார்த்தா …பால் டம்ளர் … புகட்டலானு கையில எடுக்க பின்னாடி காலை ஏதோ விடுக்குன்னு கடிச்சா மாதிரி… திரும்பறச்ச… கையிலிருந்த பால் தரையில்… அதைக் குடிச்ச பூனை மல்லாந்து விழ … செய்வதறியாம … அழுதழுது தூங்கின குழந்தையத் தோளுல போட்டு…வந்த சுவடு தெரியாம கிளம்பிட்டேன்….

பழனி ….டேய் …அப்படின்னா….அந்தக் குழந்தைதான் …..அதிர்ச்சியுடன் நான் கேட்க ….

ஆமாடா. ஏதோ ஒரு சின்னத் தடயத்த வைச்சு … நா வந்து போனதத் தெரிஞ்சுகிட்ட ஆதிமூலத்தோட ஆளுங்க கொலைவெறியோட என்னைத் தேடி ஓஞ்சு …. ஊர் ஊரா ஓடி … சொத்தெல்லாம் வித்து நிலபுலனா வாங்கிப்போட்டு இந்த ஊர்ல செட்டிலாயிட்டேன் .

அவங்க குலத்தையே வேரோட அறுக்கப் புறப்பட்ட நா… இன்னைக்கு இப்படி இருக்கேன்னா அதுக்குக்  காரணம் ….செந்தில் … அன்னைக்குப் பெத்தவ இறந்து கிடந்தது கூடத் தெரியாம…அந்தப் பிஞ்சு இருந்த நிலை.. என்னோட மென்மையான உணர்வுகளைத் தட்டி எழுப்பிடுச்சு ..

மனுஷனோட தேவையில்லாத குரோதம், வெறி, ஆயுளே அற்பமா இருக்கிறது உணராம வளர்த்துக்கற அற்ப சபலங்கள் …உயிரையே பணயமா ஆக்குற அளவுக்கான தண்டனையா …இல்லாம கடந்து வர முடிஞ்சா எவ்வளோ நல்லா இருக்கும் 

மண்ணுல பிறக்கறச்ச,எல்லா உயிருமே நல்ல உயிர்தான்… அப்படின்னா … ஒருத்தன் நல்லவன் /கெட்டவன்னு தீர்மானிக்கறது அவன் வளர்ற சூழ்நிலைதான். சின்ன வயசுலேருந்தே போதிக்கக் கூடிய ஒழுக்கம் சார்ந்த விஷயங்கள் ரொம்ப அவசியம்…ஒருத்தன் வாழ்க்கையிலே எவ்வளோ உயரத்துக்குப் போறான்கிறது முக்கியமில்ல…அந்த உயரத்தை எட்ட அவன் தேர்ந்தெடுக்கிற பாதைதான் ….

என் குடும்பமே அழிஞ்சு போயிடுச்சின்னு முதல்லே வாழ்க்கையில பிடிப்பே விட்டுப்போச்சு .. 

ஆனா… நம்மளத் தாங்கின பூமிக்கும் ….சமூகத்துக்கும் எதாச்சும் செய்யனும்னு தோணிச்சு    அதுக்காகத்தான் விவசாயம். 

என்னதான் செந்திலுக்கு அப்பாவா என்னை அடையாளம் காண்பிச்சாலும் …என்னோட முயற்சி தாண்டி அவனோட மரபணுக்கள் …அவனுக்குத் தப்பான பாதையைக் காமிச்சிறக் கூடாதுங்கறதுல உறுதியா இருக்கேன் .

எனக்கு அவன்… அவனுக்கு நான் …. அது போதுண்டா …விம்மி விம்மி 

அழுதவனைக் கட்டியணைத்துத் தேற்றிய மாதவன் … உனக்கு நா இருக்கேண்டா… மொழிந்தவன் மனக்கண்ணில் வள்ளியின் உருவம் மின்னிச் சென்றது.  

முற்றும்.

📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!