எழுதியவர்: ஆர் .சத்திய நாராயணன்
பழமொழி: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் …!
அர்த்தம்:
அதாவது குற்றம் சின்னதாக இருந்தாலும் செய்து
விட்டால் நம் மனதில் குற்ற உணர்வு துடிதுடிக்கும்
ஆம். அதுவே நெஞ்சு குறு குறு என்று ஆகி விடும்.
மதுரை .
திருபரங்குன்றம் கோயில் வீதியல் அமைந்தது தான் டைலர்ஸ் ராணி கடை. ஆம். டைலர் ராணி தான் கடையின் உரிமையாளர் .ராணி ஒரு விதவை. திருமணம் முடிந்த 2 ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை ஒரு விபத்தில் இழந்தார். ராணிக்கு உறவு என்று சொல்லி கொள்ள யாரும் இல்லை. தனது அம்மா , அப்பாவை இளமையிலேயே இழந்தார் . அவருக்கு தையில் தெரியும். எனவே ஒரு தையலகம் ஆரம்பித்தார்.அவர் புடவைக்கு தலைப்பை அடித்து தருவார். மற்றும் சட்டை தைத்து தருவார். பிறகு துணி வாங்கி பெண்களுக்கு நைட்டியை விற்று வந்தார். அவர் வீடு 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆர்வி பட்டியில் இருந்தது .ஒரே ஒரு அறை தான் . தனக்கு போதுமானதாக இருந்தது .ராணி உண்மையில் ராணி போன்றே ஆடம்பரமாக உல்லாசமாக இருந்தார். அவருக்கு நிறைய வடிகையளர்கள் அதிகம். நன்கு தைத்து கொடுப்பார் . ஆனால் காசு அதிகமாகவே வாங்குவார். திருமங்கலம், திரு நகர் ,திருபுரகுன்றம் என்று இல்லமால் தூரத்தில் மதுரையில் இருந்து வரும் வாடிக்கையாளர் வருவதும் உண்டு . பிசினஸ் நன்கு நடந்தது .இவரிடம் இளம் பெண்கள் துணி வாங்கி கொடுத்து சுடிதார், துப்பட்டா தைத்து வாங்கி செல்வார்கள் .அதில் நல்ல வருமானம் கிடைத்தது .யாரையும் வேலைக்கு வைத்து கொள்ள வில்லை . எல்லா வேலைகளயும் அவரே செய்வார். இப்படை தொழிலில் ராணியாகவே இருந்தார். இவருக்கு சற்று திமிறும் இருந்தது. பின் பண விஷயத்தில் கண்டிப்பாகவே இருந்தார். இப்படி வாழ்ந்து வந்த ராணி வாழ்விலும் சுனாமி வந்தது.
ஒரு நாள் .
ஒரு கிழவி ..வயது எண்பதை தாண்டி இருக்கும் .” டைலர்ஸ் ராணி “ கடைக்கு வந்து ஒரு சட்டை துணியை தந்து சட்டையாக தைத்து தர சொன்னார். அந்த கிழவி பார்பதற்கு உடல் மெலிந்து பிச்சைக்காரி போல்
இருந்ததாக ராணி நினைத்தார்.
“ அம்மா ..ஒரு சட்டை தான் .தயவுசெய்து தைத்து கொடுங்கள் “ என்றார்.
“ முடியாது ….நீங்கள் போய் விடுங்கள் “ என்று அலட்சியமாக சொன்னார்….
“ இல்லைமா ..நீங்கள் கேட்கும் காசை தந்து விடுகிறேன் “ என்று கெஞ்சினார். “நீ போய் விடு ..” என்று ராணி சொல்ல மீண்டும் அந்த கிழவி கெஞ்சினாள்.
“ அடிப்போடி…!” என்று ஈவு இரக்கம் இன்றி துரத்தினார் .அந்த கிழவி மனம் உடைந்து போனார் . ராணி கண்டு கொள்ள வில்லை.
தொடர்பு இருக்கிறதோ இல்லையோ சில சமயம் விதி நம்மோடு விளையாடி விடும். அப்படி தான் ராணிக்கு கஷ்ட காலம் வந்தது .திடிரென அவரது வியாபாரம் படுத்து விட்டது . அவர் வடிக்கையாளர் பலரை இழந்தார். விற்பனையும் குறைந்தது. மாத வருமானம் மிகவும் குறைந்தது. 2 மாதங்கள்
தான் தான் தொழில் யாவும் அழிந்தது . என்ன செய்வது என்றே தெரியவில்லை .மிகவும் தவித்தார் . மனம் சரி இல்லாததால் வீட்டிற்கு நடந்தே சென்றார் .அப்படி நடந்து போகும் போது அந்த கிழவியின் இறுதி
ஊர்வலம் போய் கொண்டு இருந்தது . கூட்டம் அதிகமாகவே இருந்தது.அவர் அந்த கிழவி தன்னிடம் வந்து ஒரே ஒரு சட்டை தைத்து தர கெஞ்சியதும் நினைவிற்கு வந்தது. மனதில் ஒரே போராட்டம் .அது அவரை
என்னவோ செய்தது .அந்த ஊர்வலத்தில் பக்கத்து மளிகை கடைக்காரர் போவதை பார்த்தார்.
மறுநாள் .
காலையில் கடைக்கு வந்த ராணி மனம் சோர்ந்து காணப்பட்டார். அவரது வியாபாரம் திடிரென படுத்தது ஏன் என்று தெரியவில்லை . அந்த கிழவி பற்றி கேட்க பக்கத்து மளிகை கடைக்கு சென்றார். மளிகை கடைகரார் அவரை உட்கார சொன்னார்.
“ ஐயா …நீங்கள் நேற்று ஒரு கிழவி இறுதி ஊர்வலத்தில் சென்றேர்களே…அவர் யார் …? “
“ அம்மா …நீங்கள் கடை வைத்து உள்ள இடத்தில தான் அவர் கடை வைத்து இருந்தார். கடை பெயர் “ சாமி டைலர்ஸ்..” அவர் கடையில் தனியாகவே கடுமையாக உழைத்தார்.அப்போ சுடிதார் , துப்பட்ட எல்லாம் இல்லை. பாவாடை தாவணி தான் . மிக நன்றாக தைத்து தருவார்.பின் பெண்களுக்கு புடவை தலைப்பு, சட்டை எல்லாம் தைத்து தருவார். மேலும் தானே துணி வாங்கி உள்பாவாடை தைத்து தருவார். பணம் அதிகம் கேட்க மாட்டார் .அது மட்டும் அல்ல . கை வேலைப்பாடு உள்ள கை குட்டைகளும் விற்பனை
செய்வார். நல்ல கிராக்கி . உழைப்பால் உயர்ந்தார் .தனது 35 வயதிலிருந்து 75 வயது வரை கடுமையாக உழைத்து முன்னேறினார். ஆம் .பணிவு ,உழைப்பு , நேர்மை இது தான் அவரது முதலீடு . அவருக்கு என்று யாரும் இல்லை. குழந்தைகள் இல்லை. வறுமை தான் ஆனால் அதை பார்த்து கலங்கவில்லை. மதிய சாப்பாடு மட்டுமே நன்றாக சாப்பிடுவார். ஆம். கோயிலில் தினமும் அன்னதானம் நடைபெறும் .நடந்து சென்று தினமும் அன்னதானம் சாப்பிடுவார். காலையும் இரவும் கஞ்சி தான் .அவர் சும்மா இருக்கும் நேரம் கோயிலிலே நேரம் செலவு செய்வார்.முருகன் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும் .சதா “ முருகா …முருகா ..” என்றே சொல்லி கொண்டு இருப்பார். உடம்புக்கு எதாவது வந்தால் மதுரை சென்று ராஜாஜி
அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று திரும்புவார். கொரோன வந்த போது அவரை அது விடவில்லை. ராஜாஜி மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சை பெற்று திரும்பினார். அவரை போல யாரும் வேலை செய்ய முடியாது .அது மட்டும் அல்ல .தன்னிடம் உதவி கேட்டு வரும் அனைவர்க்கும் உதவி செய்வார். ஒரு தடவை ஒரு பிச்சை காரி அவரிடம் உதவி கேட்டு வந்தார். அவர் பணம் கொடுக்க வில்லை. தன்னிடம் இருந்த பாவாடை ,தாவணி மற்றும் சட்டை கொடுத்து அனுப்பினார்.அவருக்கு
மனிதாபம் அதிகம் இருந்தது .எனவே யார் கேட்டாலும் உதவி செய்வார்.” என்று பல கதைகளை மளிகை கடைக்காரர் சொன்னார் .அந்த கிழவி ராணியின் மனதை ரொம்பவே பாதித்தார் .
“ அவங்க பேரு …? “
“ கோமதி ..! “
“ நல்ல பொம்பளை . வாழ்கையில் கஷ்ட பட்டும் மனம் கலங்கவில்லை.. முருகனை வணங்காத நாளும் இல்லை.”
“ ஆமாம் . அவர் ஒரு வழிகாட்டி …!”
“ சரி ..நான் வரேன் அண்ணே …! “ என்று சொல்லி தன் கடைக்கு வந்தார். ஈ ஒட்டும் வேலை தான் .ராணிக்கு அதிர்ச்சி . அந்த நல்ல கிழவிக்கு சட்டை தைத்து தர மறுத்து விட்டோமே என்று வருந்தினார். அவரை அவர் காசு தருகிறேன் என்று சொல்லியும் அவரை பிச்சைக்காரி போல் நடத்தி விரட்டி விட்டோமே என வருத்தினார் .
தன் வினை தன்னை சுடும் .ஆம். இதை உணர்ந்தார் ராணி .ராணிக்கு இப்போது வறுமை தாண்டவம் ஆடியது . எல்லாம் அந்த கிழவியை துரத்தி விட்டதால் என நம்பினார். அவர் தன் போக்கை சரியாக இல்லாமால்
….அந்த கிழவி உணர்வை பதித்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அவரை பிடித்து ஆட்கொண்டது. பரிதாப உணர்வில் மூல்கினார் .இன்று முருகனை சென்று பார்த்து மன்னிப்பு கேட்டார்.பிறகு அன்னதானத்தில் சாப்பிட்டார் .தனது ஆணவம் , அகம்பாவம் மற்றும் திமிறு எல்லாம் ஒழிந்தது. முருகனிடம் மனமார மன்னிப்பு கேட்டு தன் கடைக்கு திரும்பினார். ஒரு பெரிய ஆர்டர் கிடைத்து இருந்தது. 4 சுடிதார் , 4 துப்பட்டா மற்றும் 4 நைட்டி என ஒரு நடுத்தர வயது பெண்மணி கொடுத்தார் .
“ அட்வான்ஸ் வேண்டுமா …அம்மா …? “
“ இல்லை ..தைச்ச பிறகு வாங்கி கொள்கிறேன் …! “.ஆம் .ராணியின் மனம் மட்டும் அல்ல பிறரை மதிப்பு கொடுத்து பழக ஆரம்பித்தார். பணிவாக பேச ஆரம்பித்தார். அந்த கிழவி கதை இவரை ரொம்ப பாதித்தது. தினமும் காலை முருகனை தரிசித்து விட்டு தான் கடையை திறப்பார். வடிக்கையளர் அதிகமாக வர மீண்டும் அதிகரித்தார்கள் .எல்லாம் கிழவி மற்றும் முருகன் செய்த உபயம் .வியபாரம் அதிகரித்தது . தன்னிடம் இருந்த ஆணவம் , அகம்பாவம் மற்றும் திமிறு எல்லாம் ஓடியே விட்டது. முருகன்
எல்லாவற்றையும் ஒழித்து விட்டார் .ராணிக்கு மீண்டும் சந்தோசம் வந்தது . முருகன் தன்னை கை விடவில்லை என்று எண்ணி மகிழ்ந்தார்.அந்த பாட்டி தான் தன் மாற்றத்திற்கு காரணம் என்று நன்றாகவே உணர்ந்து இருந்தார். தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்ய எண்ணினார் .
ஆம். அவர் ரொம்பவே மாறி விட்டார் .
தன் “ டைலர்ஸ் ராணி “ என்ற கடையின் பெயரை மாற்ற நினைத்தார். அவருக்கு ஆர்டர் செய்த பெரிய போர்டு வந்தது.
அதில் பெரிய கொட்டை எழுத்தில் எழுதி இருந்தது அந்த கிழவியின் கடை பெயரே …! ஆம் …!!
“ சாமி டைலர்ஸ் ! “
முற்றும்.
📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.