படம் பார்த்து கவி: புலியான பூனை

by admin 1
57 views

மெல்ல மெல்ல  நடக்கும்
பார்வையில் பாவம் பொங்கும்
நிழலுக்கும் நெஞ்சம் நடுங்க
அஞ்சும் சுட்டிப் பூனை

வீட்டுக்கு வீடு ஓடி
தினமும் பாலைத் தேடி
பானை நிறையப் பார்த்ததும்
புயலாய் பாயும் பூனை

துரத்தும் நாயைக் கண்டு
கண்கள் நெருப்பு கழலென
கால்களில் முழு வேகத்தோடு
வீரத்தில் புலியாகிய பூனை

துன்பம் வந்தால் துடிப்போடு
அச்சமின்றி தலையை உயர்த்தி
“பூனைதானே” என நகைத்தவர்கள்
முன்பு வலியை வென்று
புலியாக வாழும் பூனை

வலிமை உருவத்தில் அல்ல,
முடிவு எடுக்கும் தருணத்தில் மட்டும் தான் தெரியும்…

யாரெல்லாம் பூனை…. யாரெல்லாம் புலியென!

நா.பத்மாவதி
கொரட்டூர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!