பைரட்ஸ் மே: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

by admin 2
16 views

எழுதியவர்: குட்டிபாலா

எபநேசரின் ஒற்றைப் படகை பொருட்களோடு கைப்பற்றி கொள்ளை கப்பல் தலைவனின் முன் நிறுத்தினர். இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த தன்னிடமிருந்து கைப்பற்றிய ஐந்து கோடி
போதைப் பொருள்களை  திருப்பித் தருமாறும் பரம்பரை மீன்பிடித் தொழிலை விடுத்து கடத்தல் தொழிலில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்றும் மன்றாடினார் எபநேசர். அடுத்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவோடு  நிறுத்திக் கொள்ளப் போவதாகவும்  கெஞ்சினார்.
“ஏன்”? என்ற தலைவனின் கேள்விக்கு மகள் ஃபிலோமினாவின் காதலன் அடுத்த ஆண்டு அவளை மணந்து கொள்ளவிருப்பதாகவும் அதன்பின் தான் கர்த்தர் சேவையில் ஈடுபட போவதாகவும் சொன்னார்.
ஃபிலோமினா என்ற பெயரை கேட்டதுமே   தலைவன் எட்வின் முகத்தில் மகிழ்ச்சி.  முதன்முதலாக ஃபிலோமினாவைக் கண்டதும் அவள் கண்களாலேயே தன் மனதை கொள்ளையடித்ததும் அவளிடம் காதலை கூறியபோது அதே காந்தக் கண்களால் சம்மதம் சொன்னதும் நினைவில் வர எழுந்தோடிவந்து வணங்கினான் அடுத்த விநாடி முதல் அங்கே எபநேசருக்கு தடபுடல் உபசாரம்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!