பைரட்ஸ் மே: நல்ல உள்ளம்

by admin 2
7 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் 

நிலவின் ஒளியில் அந்த கப்பல் அழகாக அசைந்துக் கொண்டு மக்களையும் சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இந்தோனேசியா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

நடுக்கடலில் திடீரென கடற் கொள்ளையர்கள் கப்பலைத் தாக்கினர். 

பொருள்களை தங்கள் படகிற்கு எடுத்துச் சென்றனர். வலிமை உடைய வர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள கட்டி இழுத்துச் சென்றனர்.

அந்தக் கூட்டத்தின் தலைவன் “உங்கள் உடமைகள் அனைத்தையும் இந்த பெட்டியில் போடுங்கள்”என்று ஆணை இட்டான்.

அப்பொழுது ஒரு சின்ன பெண் குழந்தை அந்த பெட்டியில் உட்கார்ந்தது.

“உங்க கிட்ட இருக்கிற பணம், நகை இவைகளைத் தான் போடச் சொன்னேன். குழந்தையை அல்ல” என்று கத்தினான்.

அந்த குழந்தை பேசியது.”நானே தான் பெட்டியில் உட்கார்ந்தேன். எனக்கு அம்மா என்றோ சொந்தம் என்றோ யாரும் இல்லை. என் அப்பாவைக் நீங்க கட்டி இழுத்துக் கொண்டு போகிறீர்கள். அதன் பின்னர் நான் எங்கே போவேன்? அதனால் நான் பெட்டியில் உட்கார்ந்தேன்.”

இதைக் கேட்டதும் கொள்ளைக்காரன் மனது இளகியது. கண்களில் தண்ணீர் வந்தது. கல்லுக்குள் ஈரம் உண்டு என்பதை உணர்ந்தனர்.

அனைவரையும் விட்டு விட்டு சென்றான். குழந்தையின் அப்பா மகனைக் கட்டித தழுவிக் கொண்டார். 

அந்த குழந்தையின் சமயோசித செய்கையைப் பாராட்டினர்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!