பைரட்ஸ் மே: ரிவென்ஜ்

by admin 2
15 views

எழுதியவர்: உஷாராணி

சூடான் நாட்டின்  போர் படை அதிகாரியாக இருந்தவர்   யூசுப். நண்பர்கள்  வஞ்சத்தால் பதவி இழந்து, தண்டனை பெற்றார்.  

அங்கிருந்து தப்பி, கடற் கொள்ளைகளில் ஈடுபட்டார். மிகச்சிறிய கப்பல்கள், படகுகளில் கொள்ளையடித்து அதை வைத்துக் கொண்டு, பெரிய பைரேட்ஸ் கப்பலை உருவாக்கினார்.  கப்பலுக்கு ரிவென்ஜ் என்றே பெயரிட்டார். அந்த நாட்டிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

ஆனால், அவரது 15 வயது மகன்   அலி படிக்க  வேண்டும்  என்று  விரும்பினார்.  அந்தோ பரிதாபம்     யூசுப்   தன் சகாக்களால் கொல்லப்பட்டார்.

மகன்  அலியின்    மனமோ    சூறாவளி காத்தில் சிக்கிக் கொண்ட, கடலை போல்  கொந்தளித்தது: 

கொன்றவர்கள்  இவனையும்  இழுத்துச் சென்றனர். அவனை  கொடுமை படுத்தினர்.

அங்கு சொல்லா வண்ண துயரம்  அடைந்தான்.

இப்படியாக, ஆண்டுகள்   செல்ல செல்ல    வலிமையாக வளர்ந்தான். ஒவ்வொன்றையும் பொறுமையாக கற்றுக் கொண்டான்.

ஒரு நாள், சரக்கு கப்பல் வருவதை அறிந்ததும் , அதை கொள்ளையடிக்க  திட்டமிட்டனர்.

கொள்ளை யடித்தும், தக்க தருணம் எதிர்பார்த்து, காத்திருந்த   அலி, தன்  அப்பாவை கொன்றவர்களை   கொன்று பழிதீர்த்தான்.

கொள்ளையடித்த     பொருட்களை  தான்சானியாவில் விற்று, அங்கிருந்து தரை மார்க்கமாக எகிப்துக்கு சென்று  சிறப்பாக வாழ்ந்தான்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!