எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
மெய் எழுத்து வார்த்தை: பஞ்சு மிட்டாய்/ஞ்
ராகவனும் மணியும் நல்லூர் கிராமத்தில் இருந்து பக்கத்து நகரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.
நல்லூர் கிராமத்தில் அன்று அம்மன் கோயில் திருவிழா. அங்கு பஞ்சு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். நல்ல வெயில். ராகவனும் மணியும் அருகில் சென்று எவ்வளவு என்று கேட்டு பணம் கொடுத்து வாங்கிச் சென்றனர்.
சிறிது நேரத்தில் அவர்களுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இருவரும் கண் முழித்து பார்த்த போது இரயிலில் ஒரு பாட்டியுடன் பயணித்துக் கொண்டிருந்தனர். பாட்டி நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது போனை எடுத்து 1098 க்கு ரயிலில் பயணிக்கும் அவர்களின் போட்டோவுடன் மணி மெசெஜ் கொடுத்தான்.
அடுத்த ஸ்டேஷனில் காவல் துறையின் காவல் அதிகாரி வந்து அந்த பாட்டியை கைது செய்தனர். அந்த பாட்டி சொன்ன தகவல் படி மற்ற குழந்தைகளையும் மீட்டனர்.
ராகவன் இன்னும் மயக்கத்தில் இருந்தான். காவல் அதிகாரி “உனக்கு மட்டும் ஏன் மயக்கம் வரவில்லை?” என்றார். நான் என் பங்கை தூரத்தில் இருந்த ஏழை சிறுவனுக்கு கொடுத்து விட்டு திரும்பும் போது ராகவன் மயக்கம் அடைந்தைப் பார்த்து நானும் மயக்கமானவனாக நடித்தேன். அதனால் தான் அவர்கள் திட்டத்தை அறிந்து தகவல் தர முடிந்தது.
ஆசிரியர் “ஆம்புலன்ஸுக்கு 108, போலீஸுக்கு 100, தீயணைப்புக்கு 101, தனித்திருக்கும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090, குழந்தைகள் பாதுகாப்புக்கு 1098 என்ற எண்கள் இருக்கின்றன.” என்பதை கூறியிருக்கிறார்.
மணியின் புத்திசாலி தனத்தைப் பாராட்டி கவர்னர் பரிசு அளித்தார்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.