மெய் எழுத்து போட்டி கதை: மெய்யெழுத்தின் கதை

by admin 2
69 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் 

மெய் எழுத்து வார்த்தை: அப்பா, அம்மா/ப், ம்

அழகான அந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு 

ஆசிரியை உள்ளே நுழைந்ததும்  ‘வணக்கம் டீச்சர் ” என்று ஒரே குரலில் கூறினர்.

 ‘வணக்கம் பிள்ளைகளா!’ என்றார் ஆசிரியை வாணி.

கரும் பலகையில் அன்றைய தேதி,  கிழமை வலது புறத்திலும் இடது புறத்தில் மாணவர் எண்ணிக்கை, வருகை, விடுப்பு என்று அழகான கையெழுத்தில் எழுதி இருந்தான் மாணவன் மதியழகன்.

“டீச்சர்.. எனக்கு ஒரு சந்தேகம்.ஏன் மெய் எழுத்துக்கள் தலையில் ஒரு பொட்டு?” ஆவலுடன் கேட்டான் மணி.

“பேச்சு மொழி தான் நம் தமிழ் மொழி.

தொண்டையில் இருந்து வரும் காற்று வாய்ப் பகுதியில் தடைப்பட்டு வெளியேறும் போது மெய் ஒலிகள் உண்டாகின்றன. ஓசையை குறிக்க அந்த புள்ளி. உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து வருவது உயிர் மெய் எழுத்து.புரிந்ததா?”

“நன்றாகப் புரிந்தது டீச்சர்”

“தானே இயங்குவது உயிர்  எழுத்துக்கள். 

உயிர் ஒலியின் துணையின்றி தானே இயங்காத ஒலிகள் மெய் எழுத்துக்கள். வார்த்தைகளில் முதலில் வராது.

உயிர் ஒலியுடன் இணைந்து இயங்கும் ஒலிகள் உயிர் மெய் எழுத்துக்கள்.”

“டீச்சர், அப்பா, அம்மா இரண்டு வார்த்தைகளிலும், உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து வருகிறது.”என்றான் கணேசன்.

எல்லா குழந்தைகளும் கைத்தட்டி பாராட்டினர்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!