எழுத்தாளர்: நா.பா.மீரா
அப்பா ஏம்மா — முன்ன மாதிரி இல்ல —மகன் ஆகாஷ் கேட்க ….
நண்பன் ஒருவனின் ஆடம்பரமான அபார்ட்மென்ட் கிரகப் பிரவேசத்திற்குச் சென்றபோது … சூப்பரா இருக்குப்பா … வாங்கினா இத மாதிரி ஒரு வீடு வாங்கணும் …விழிகள் விரிய ஆகாஷ் சொல்ல …..
தன் வசதியையும் மீறி ஓவர் டைம் …விளைவு …சிறு கூடு …நிறைவான இல்வாழ்க்கை… என்ற சுபாவின் கனவுகள் யாவும் தவிடு பொடியாயின .
சுபா… கிராமத்துல இருக்குற நம்ம பூர்வீக வீட்டை வித்துடலாம்னு இருக்கேன் ..அந்தப் பக்கமாக வந்த ஆகாஷிடம் … கண்ணா …உன் கனவு அபார்ட்மென்ட் சீக்கிரமே வாங்கிடலாம் . வேற என்ன வேணும் சொல்லு …
என்னோட பழைய —எங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணற அப்பாதான் வேணும் …கட்டிக்கொண்டு அழ விக்கித்தான் நரேஷ்.
நன்றி