எழுத்தாளர்: நா.பா.மீரா
மாணவர்களே! நா இன்னைக்கு ‘லேடி பேர்ட்’ பற்றி ஒரு கதை சொல்லப்போறேன் . ஒரு சமயத்துல ஐரோப்பாவில நல்லா செழித்து வளர்ந்த பயிர்களை எல்லாம் பூச்சிகள் பரவி அழிச்சுது.கடுமையான உணவுப் பஞ்சம் ….
வேதனையில் உழவர்கள் ….ஒண்ணு கூடி மேரி மாதாவ வேண்டிக்கிட்டாங் களாம் .
திடீர்னு …கூட்டம் கூட்டமா ஆரஞ்சும், சிவப்பும் கலந்து கறுப்புப் புள்ளிகளோட இருந்த வண்டுகள் ….பயிர்கள் மேல் அமர…. ஐயோ …இது என்ன சோதனை …உழவர்கள் பதற …அந்த வண்டுகள் பூச்சிகளை உண்டு …பயிர்களைக் காப்பாற்றின .
மேரி அனுப்பிய —-லேடி பேர்ட் , உழவர்களின் நண்பன் ஆயின .
இதுலேருந்து என்ன தெரியிது மாணவர்களே ?
‘நம்பினோர் கைவிடப்படார்’ மாணவர்களின் குரல் கோரசாக ஒலித்தது.
நன்றி