எழுத்தாளர்: ரங்கராஜன்
சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலையான பக்கிரி மிக மனவருத்தததுடன் வெளியே வந்து பழக்கதோஷத்தில் மனைவி, மகளைத் தேடினான் ,ஆனால் அவர்கள் வரவில்லை. பக்கிரிதோஸ்த் சிவா வந்து அண்ணே என்றுவந்தான்.
சிவா டூவிலரில் அமர்ந்த பக்கிரி ,மனதில் பழைய எண்ணங்கள் ஒட ,ஆரம்பித்தது.
சுமாராக 7ஆண்டுகளுக்கு முன்பு பக்கிரி க்கும் அவன் மனைவிக்கும்,வழக்கமான சண்டை, ரொம்ப முற்றி கையில் இருந்த பிளேடால் அவன்மனைவியை கிழிக்க, அவள் உடம்பிலிருந்த இரத்தம் வழியே மயங்கிவிழ, பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்த பக்கிரி மகள் ,ரத்தத்தைப் பார்த்து மயங்கி விழ விழுந்த இடத்தில் இருந்த அம்மிக்கல்லில் இடித்து அவளும் மயங்கிவிழ, கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்த பக்கிரியை கைதுசெய்ய,பக்கிரி மனைவி, மகள் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இரத்தம் அதிகம் வெளியானதால் காலமானார்கள்.
பக்கிரிக்கு 7ஆண்டுசிறைதண்டணை முடிந்துவெளியே திருந்திய மனிதனாக வந்தான். வீட்டுக்குப் போய் அவனிடம் இருந்த எல்லா பிளேடுகளை உடைத்து எரிந்து, அந்த ஊரை விட்டே போய்விட்டான் ,முன்னாள் பிளேடுபக்கிரி.
நன்றி