10 வரி போட்டிக்கதை: பட்டாம்பூச்சி

by admin
62 views

எழுத்தாளர்: கௌரி

பட்டாம்பூச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தேன். அடுக்களையில் அம்மா வேலையாய் இருந்தாள். அம்மா என் அலறல் சத்தம் கேட்டு வாசல் நோக்கி வந்தாள் அம்மா. என்னடா? என்ன ஆச்சு? கதறுகிறாள் தாய். ஆனால் அவள் குரல் கேட்கிறேன். அவளைப் பார்க்க முடியவில்லை என்றேன். அம்மா  தோளில் சுமந்து சங்கரநேத்ராலயாவிற்கு விரைந்தாள்.
மருத்துவர் பந்து கண்ணில் பட்டு பார்வை நரம்பில் இரத்தம் உறைந்து விட்டது.என்ற போது நான் மட்டுமல்ல அம்மாவும் தான் உறைந்து  போனாள். யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை மாற்று அறுவை செய்து பார்வை கொணர்ந்தார் மருத்துவர். இறைவனையே கண்டேன் அங்கு

முற்றும்.

10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!