எழுத்தாளர்: நா.பா.மீரா
சூளையில் வேலை முடித்து– சூபர்வைசரிடம் ஓவர்டைம் சம்பளம் பெற்ற பரமேஸ்வரன் தாத்தாவுக்கு ஒரே குஷி.
இன்னைக்குக் கண்டிப்பா சாப்பிடணும் —-எண்ணும்போதே நாவில் நீர் ஊறியது.மனைவியை இழந்த அவர்தன் தினப்படி சம்பளத்தை அப்படியே மருமகளிடம் கொடுத்துவிடுவார்.
குடும்ப வண்டியே இழுபறியாக ஓடிக்கொண்டிருக்க …. தினமும் அந்த வண்டியை ஏக்கத்துடன் கடந்து செல்வார்.
என்ன தாத்தா …. ஒரு வழியா —-இன்னைக்கு உன் ஏக்கம் தீரப்போகுதா?
ஆர்வமாக வாங்கி வாயில் வைக்கப் போனவர் —– அவர் கைகளையே ஏக்கமாக நோக்கிக் கொண்டிருந்த — அந்தப் பரட்டைத் தலைச் சிறுவனிடம்— குல்பியைக் கொடுத்து—- நடையைக் கட்டினார்.
முற்றும்.