எழுத்தாளர்: நா.பா.மீரா
காலாண்டு விடுமுறை . மகன் விக்னேஷுடன் தோழி வீட்டுக்கு வந்திருந்தாள் அனுபல்லவி . எந்நேரமும் பதட்டத்துடன் சுற்றிக் கொண்டிருந்த தோழி சங்கவியின் மகள் ஆர்னிகா ….
ஏண்டி இப்படி …கேட்ட பல்லவியிடம் … ஊம் என்னத்தச் சொல்ல …. எதுலேயும் ஒழுங்கே கிடையாது …அலுத்துக் கொண்டாள் சங்கவி.
விக்னேஷ் விளையாட்டாக … அவள் தலையிலிருந்த ஹேர் பேண்டை இழுக்க ….கோபத்தில் கை ஓங்கியவளைத் தடுத்து …சின்ன விஷயம்தானே ஏம்மா இவ்வளோ கோபம் ?
ஆண்ட்டி-… முடி காத்துல பறக்காம … பதிஞ்சு கச்சிதமா இருக்கத்தான் ஹேர் பேண்ட் போட்டிருக்கேன் . அப்படின்னா … எல்லாம் அததோட இடத்துல இருந்தா பதட்டம் இல்லை …. அப்படித்தானே?
ஆர்னிகாவுக்குப் புரிந்திருக்குமா?
முற்றும்.