எழுத்தாளர்: எம். சங்கர்
“கடைசில பாத்தியா நான்சொன்னமாதிரியே நடந்துடுச்சு.. என்னதான் வீராப்பா சொன்னாலும்உள்ளூர திக்திக்னுதான் இருந்துச்சு
. இருந்தாலும் உன்னை இறுக கட்டி நம்ம கைகளிரண்டையும் பிணைத்து
‘நம்மை பிரிக்க முடியாதுன்னு கடைசி நொடில கத்தினேனே கேட்டுச்சா?”
“ கேக்காமையா ‘யார் என்ன கொடுமை நானும் கத்தினேன்”
“ ஆனா இப்பவும் நம்மள பிரிச்சுடுவாங்களோன்னு ஒரு பயமிருக்கு”
“ சே சே அந்த ஈனத்னமெல்லாம் மனுஷங்களுக்குத்தான் பூக்களுக்கெல்லாம் ஜாதி மதமெல்லாம் கிடையாது.
இந்தமனுஷங்கள் கிட்டேந்து தப்பிக்க எந்த
தண்டவாளத்தில நாம தலையை விட்டு ரத்தம் சிந்தினோமோ அந்த இடத்திலேயே நாம
திரும்பவும் மலர்களாக சேர்ந்தே பிறந்து நம்ம காதலை தொடர்வது எவ்வளவு மகிழ்ச்சியா இருக்குல்லே”
“ ஆமாமா” என்றவாரே இரண்டு மலர்களும் ஆசையுடன் முட்டி மோதிக்கொண்டன.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
