எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
பெண்: பார்த்தாயா என் உதட்டை வந்தடைந்தால் எவ்வளவு தனித்துவம் பெற்றாய்! நானே சிறப்புக்குரியவள்.
உதட்டுச் சாயம்: இல்லை, இல்லை. அழகிகள் நிரம்பிய உலகில் எனைக்கொண்டே நீங்கள் தனித்துவம் பெற்றீர்கள். நானே சிறப்பு.
பெண்: பிரபஞ்சம் முழுதும் பெண்கள். எண்ணற்றோர் உனை நித்தம் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் ஏன் அழகாய் தெரிவதில்லை!! என் அழகை கொண்டே நீ கவனிக்கப்படுகிறாய்.
உ.சா: அப்படியானால், இயல்பாய் கருமை நிறம் கொண்ட ஆயிரம்பேரில் என்னை பயன்படுத்தும் பெண்கள் தனித்தும், அழகுமாய் தெரிவதேன்?
பெண்: தனித்து என்று வேண்டுமானால் சொல், அழகு என்பதை ஏற்க இயலாது.
நான்: பாவம் இருவரும். இரு “அழகு”கள் சண்டையிட, உருவாகும் பேரழகை கண்ணிமைக்காமல் காணும் நானே கூடுதல் “சிறப்பானவன்” என்பதை அறியாமல் சண்டை செய்கின்றனர்.
முற்றும்.