10 வரி போட்டிக் கதை: கற்பனை

by admin 1
101 views

குட்டிக்கண்ணா ….சமத்தா மிச்சம் வைக்காம சாப்பிட்டிடனும் … இல்லாட்டி டைனோசர் வந்து உன்னை முழுங்கிடும் .

பயத்தால் முகம் வெளிறிய அந்த இரண்டு வயதுப் பேரன் பாட்டி ஊட்டியதை வேகமாக விழுங்கினான். 

பாட்டி … நா சின்னப்பையனா இருக்கறப்போ புடிச்சு நீக இத விடவே இல்லை.டைனோசர்னு  ஒன்னு உண்மையிலேயே இருக்கா? இல்லைன்னா சும்மா எங்களை பயமுறுத்தறதுக்காக நீங்களா கற்பனை பண்ணிச் சொல்றீங்களா? 

பெரிய பேரன் யுகன் கேட்க …..

ஏண்டா கண்ணா … கார்ட்டூன் அனிமேஷன்ல விலங்குகள் எல்லாம் பேசற மாதிரி காமிக்கிறாங்களே …. அதெல்லாம் உண்மையான்னு ஆராய்ச்சியா பண்ணிக்கிட்டிருக்கே …..போவியா ….

மெளனமாக நகர்ந்தான் யுகன்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!