எழுத்தாளர்: குட்டிபாலா
விடிந்தால் கிரகப்பிரவேசம். ஊர்மிளாவிடம் “எல்லாம் ரெடியா” என்ற ரெங்கனிடம் “சிவா இருக்க கவலையே இல்லை என்றதும்”நாளைக்கு
அவனுக்கும் பூசணி சுற்றி திருஷ்டி கழித்து விடுவோம் என்றான்.
“ஆஹா. திருஷ்டி பூசணி மறந்து விட்டேனே. அர்த்த ராத்திரியில் ஊரைவிட்டு ஒதுங்கியுள்ள இந்த அத்துவானக் காட்டில் எங்கே தேடுவது பூசணியை” என்று மோட்டார் சைக்கிளில் விரைந்தான்.
மெயின் ரோட்டில் பேரூந்திலிருந்து இறங்கிய புரோக்கர் பரமனிடம் புலம்பியதும் “கவலைப்படாதேயப்பா. என் வீட்டிலேயே இருக்கிறது” என்றதும் ரெங்கமாமன், தன் மகள் சக்தியை மணம் செய்துகொடுக்க சம்மதித்தாற்போல் குஷியாகி ஆக்ஸிலேட்டரை கூட்டினான் சிவா.
முற்றும்.