எழுத்தாளர்: நா.பா.மீரா
ஒரு வார லீவை தோழி ஸ்ரீதேவியுடன் கழிக்க வந்திருந்தாள் ஸ்ரீநிதி .
மாடுலர் கிச்சன் … அதிநவீனமான இன்டீரியர் என எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆடம்பரம் . அதிலும் அந்த மூன்று பர்னர்கள் கொண்ட கிளாஸ் டாப் அடுப்பு .. ஸ்ரீநிதியின் கண்களிலேயே நிற்க….
கணவன் வெங்கட்டிடம் … என்னங்க .. ஸ்ரீதேவி வீடு வீடியோ பார்த்தீங்களா ? கிச்சன்ல அந்த அடுப்பு சூப்பரா இருக்கில்ல …நாமளும் ….
மேலும் பேசுவதற்குள் …. கிச்சனிலிருந்து டமார்… டமார்… என்று சத்தம் . ஓடிச் சென்று பார்த்தால்…. அழகான கிளாஸ் டாப் அடுப்பு சுக்கு நூறாகி இருந்தது.
நல்ல வேளை …. கிச்சனில் அப்பொழுது யாரும் இல்லை.
ஏய் … ஸ்ரீநிதி லைன்ல இருக்கியா … எதிர்முனையில் தனியாகப் பேசிக் கொண்டிருந்தான் வெங்கட்.
முற்றும்.
